YouTurn

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கினாரா திமுக MLA? உண்மை என்ன?

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கினாரா திமுக MLA? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த பரிசுத் தொகுப்பு கடந்த மார்ச் 11ஆம் தேதி வழங்கப்பட்டதாகும். ஆனால், சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் 15 அன்று தான் அறிவிக்கப்பட்டது.

பரவிய செய்தி

ராமநாதபுரத்தில் பறக்கும் படை பறந்து பறந்து வேலை பார்த்த போது எடுத்த வீடியோ. பச்சையா இருக்குடா இதெல்லாம், எதுக்குடா எலக்சன் நடத்துறீங்க @ECISVEEP திமுக தான் வெற்றி னு அறிவிச்சுருங்க.


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

சமையல் பாத்திரங்கள், கரண்டி ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பை திமுகவைச் சேர்ந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கொடுத்திருப்பதாக ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, ‘திமுகவினர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போதே வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுத் தொகுப்புகளை கொடுக்கிறார்கள்’ என்று பரப்புகிறார்.



உண்மை என்ன?


காதர்பாட்சா முத்துராமலிங்கம் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு ஏதும் வழங்கியிருக்கிறாரா? என்று இணையத்தில் தேடினோம்.



இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சில புகைப்படங்களைக் காணமுடிந்தது. அதில் மார்ச் 11ஆம் தேதி, இராமநாதபுரம் திருப்புல்லாணியில் நடைபெற்ற திமுக பிரமுகர்கள் மற்றும் முகவர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் புகைப்படங்களையும் காணமுடிகிறது.  


image.png


ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 15 அன்று தான் வெளியிடப்பட்டது. அதாவது, 15-03-2026 அன்று மாலை தான் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்; மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


இதிலிருந்து, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர்பாட்சா முத்துராமலிங்கம் திமுக முகவர்களுக்கு பரிசுத்தொகுப்பு கொடுத்த போது தேர்தல் நடத்தை விதிகள் அமலிலே இல்லை. மேலும் தொகுதி மக்களுக்கு கொடுக்கவில்லை கட்சி முகவர்களுக்கு தான் கொடுத்திருக்கிறார்.


முடிவு:


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னர் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது என்பதை மறைத்து, தேர்தல் நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கியதாக தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க