YouTurn

ஆட்சிக்கு 6 மாதங்களில் மின்வெட்டு பிரச்சினையை தீர்த்துவிட்டாரா ஜெயலலிதா?

ஆட்சிக்கு 6 மாதங்களில் மின்வெட்டு பிரச்சினையை தீர்த்துவிட்டாரா ஜெயலலிதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2013ஆம் ஆண்டின் இறுதி வரையில் கூட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்தது.

பரவிய செய்தி

’2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியின் போது பெரும் பிரச்சினையாக இருந்த மின்வெட்டை, 2011ல் ஆட்சியமைத்த 6 மாதங்களில் சரி செய்தார் ஜெயலலிதா’ 


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல மணிநேரம் மின்வெட்டு செய்யப்படும் நிலை இருந்தது. இது அப்போதைய திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய கரும்புள்ளியாக இருந்தது. 


இந்நிலையில், 2011ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த மின்வெட்டு பிரச்சினையை வெறும் 6 மாதங்களில் சரி செய்வேன் என்று கூறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததாகவும், அவ்வாறே அந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் சொன்னது போலவே 6 மாதங்களில் மின்வெட்டு பிரச்சினையை ஜெயலலிதா அரசு முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், ஜெயலலிதா நல்ல நிர்வாக ஆளுமையாக இருந்தார் என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


2011ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றது. அதன் பின்னர், தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினை இருந்ததா என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடினோம். 


முதலில் 2013 நவம்பர் மாதம் ’தினமலர்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், மின்வெட்டு தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து முறையிடலாம் என்று கோவையில் நடந்த தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக் கமிட்டியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், சென்னை தவிர தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் தினசரி 8 முதல் 10 மணிநேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



‘தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறும்’ என்று 2013 அக்டோபர் மாதம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவித்ததற்கு மாறாக, அந்த ஆண்டு திபாவளிக்கு  பின்னர் கோவையில் 8 மணிநேரமும் பிற மாவட்டங்களில் 10 மணிநேரத்திற்கும் அதிகமாகவும் மின்வெட்டு அமலில் இருந்ததாகவும் தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக் கமிட்டியின் தலைவர் பாலசுந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இதேபோல், 2013 நவம்பர் மாதம் ’BBC தமிழ்செய்தித்தளத்தில் வெளியான செய்தியில்,  தலைநகர் சென்னையைத் தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, 2013ஆம் ஆண்டின் இறுதி வரையில் கூட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்ததை தெரிந்துகொள்ள முடிகிறது.


முடிவு:


2011ல் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் ஜெயலலிதா தமிழ்நாட்டில் மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க