YouTurn

பறக்கும் சக்தி இருப்பதாகச் சொல்லி சாமியார் மலையிலிருந்து குதித்தாரா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

பறக்கும் சக்தி இருப்பதாகச் சொல்லி சாமியார் மலையிலிருந்து குதித்தாரா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மலைக் கோவில் ஒன்றில் பூஜை செய்யும் போது பூசாரி ஒருவர் கால் இடறி விழுந்து இறந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

ஆந்திராவில் 49 வயது சாமியார் ஒருவர் தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாகக் கூறி, பக்தர்கள் முன்னிலையில் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரிழப்பு 


image.png


Link / Archive Link


Facebook Link


விரிவான விளக்கம்

பக்தர்கள் சூழ்ந்திருக்க மலை உச்சியில் பூஜை செய்து கொண்டிருக்கும் பூசாரி ஒருவர் கீழே விழும் வீடியோவை கொண்டு, ‘சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாகக் கூறி, பக்தர்கள் முன்னிலையில் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரிழந்தார்’ என்று ’News தமிழ்’ உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 




உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’THE TIMES OF INDIA’ ஆங்கில செய்தித்தளத்தில் இந்த வீடியோவுடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.


image.png


கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ‘ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ப மல்லய்யா சுவாமி மலைக் கோவிலில் பாப்பையா என்ற 49 வயதுள்ள பூசாரி பூஜை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்துவிட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கையில் மணியும் இன்னொரு கையில் தீபத் தட்டையும் கொண்டு பூஜை செய்து கொண்டிருந்த போது அந்த பூசாரி கால் இடறி 40 அடி ஆழத்தில் விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது.


image.png


மேலும் இதுகுறித்து தேடியபோது, இதே செய்தியை ‘ANI’ ஆங்கில செய்தித்தளமும் வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, அந்த பூசாரி தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாக கூறி மலையில் இருந்து குதிக்கவில்லை, மாறாக பூஜை செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. மேலும் இந்த சம்பவம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, சமீபத்தில் நடந்ததல்ல என்பதும் தெரியவருகிறது. 


முடிவு:


கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மலைக் கோவில் ஒன்றில் பூஜை செய்யும் போது பூசாரி ஒருவர் கால் இடறி விழுந்து இறந்த சம்பத்தை, சமீபத்தில் பூசாரி தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாக கூறி மலையில் இருந்து குதித்து இறந்ததாக தவறான செய்தியை தமிழ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க