YouTurn

பீட்ரூட் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பீட்ரூட் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவ்வாறு பரவி வரும் செய்திகள் அறிவியல் ஆதாரமற்றவை. மேலும் வீடியோவில் பல பலன்களும் வரிசையாக கூறப்பட்டுள்ளன. எனவே சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் மருத்துவர் அறிவுரையின்றி பீட்ருட் ஜூஸ்களை பருகவேண்டாம்.

பரவிய செய்தி

Mix watermelon with lemon

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 


உண்மை என்ன?

முதலில் பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தேடி பார்த்தோம். அப்போது webmd. com இணையதளத்தில், “Health Benefits of Beetroot” என்ற தலைப்பில் பீட்ரூட் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் யார் பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் அதிகமாக உள்ளது என்றும், இது சிறுநீரக கற்கள் ஏற்பட வழிவகுக்கும் எனவும், மேலும் இது மூட்டுவலிக்கும் வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடி பார்த்த போது, Times of India ஊடகத்தில் "Love beets, but worried about kidney health? Here's how you you can reduce oxalates and prevent kidney stone risk" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பீட்ரூட்டில் ஊட்டச்சத்து, நார்சத்து, இரும்புசத்து, பொட்டாசியம் மற்றும் உணவு நைட்ரேட்டுகள் நிறைந்தவை என்றும், அவை ஆரோக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பீட்ரூட்டில் உள்ள அதிக ஆக்சலேட் உள்ளடக்கம், சிறுநீரக கற்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், ஆக்சலேட் அளவைக் கணிசமாகக் குறைக்க பீட்ரூட்டை வேகவைத்தல் நல்லது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


அதே போல் Times of India ஊடகத்தில், ஜூன் 19 அன்று "Kidney health alert: Why that glass of beetroot juice might be doing more harm than good" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகிருந்தது. பீட்ரூட் சாறில், அதிக ஆக்சலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆக்சலேட்டுகள் உடலில் கால்சியத்துடன் பிணைக்கப்படும்போது, அவை சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும். குறிப்பாக சிறுநீரக கற்கள் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, இதை உணவில் சேர்ப்பதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது மிக முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


atlantic urologyclinics. com இணையதளப்பக்கத்தில் இது குறித்து கூறப்பட்டிருந்தது. அதில் பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகளும் நிறைந்துள்ளன. ஆக்சலேட் என்பது பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகவே காணப்படும் ஒரு கலவை ஆகும். சில பழங்கள் மற்றும் காய்கறிகள் இதை உற்பத்தி செய்து கால்சியம் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இது அவற்றின் வளர்ச்சிக்கு அவசியமானது. இருப்பினும், மனிதர்களுக்கு, அதிகப்படியான ஆக்சலேட்டை உட்கொள்வது, சிலருக்கு சிறுநீரக கற்களை உருவாக்கும் என்ற குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மருத்துவர் பிரவீனிடம் யூடர்ன் தரப்பில் இருந்து ஆய்வு செய்ததில், பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் அதிகமாக இருப்பதால், அது சிறுநீரக கற்கள் ஏற்பட வழிவகுக்கும் என்பது உண்மையே என உறுதி செய்துள்ளார்.


முடிவு: 

நம் தேடலில், பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் அதிகமாக இருப்பதால், இது சிறுநீரக கற்கள் ஏற்பட வழிவகுக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் பீட்ரூட்டைத் தவிர்க்க வேண்டும் அல்லது எப்போதாவது மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆராய்ச்சிகளில் சொல்லப்பட்டுள்ளது.எனவே பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என பரவி வரும் செய்திகள் அறிவியல் ஆதாரமற்றவை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க