YouTurn

’தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டத்தை திமுக செயல்படுத்தியதா? உண்மை என்ன?

’தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டத்தை திமுக செயல்படுத்தியதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பரவிய செய்தி

தமிழர்கள் வரி பணத்தில் தெலுங்கு மொழி வளர்க்கும் திராவிட மாடல்!


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

’தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தெலுங்கு மொழி: தமிழக அரசுக்கு தெலுங்கு சம்மேளனம் பாராட்டு’ என்று தலைப்பிட்ட செய்தியை பதிவிட்டு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தமிழ் வளர்ச்சிக்கான நிறுவப்பட்ட தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தெலுங்கு மொழியை பயிற்றுவிக்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதாக சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.



உண்மை என்ன?


’தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கப்படுவது குறித்து இணையத்தில் தேடிய போது, ’தினமணி’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 



கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் சென்னையில் உள்ள ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ ஹிந்தியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டத்தை அப்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதற்காக 6 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கியது அப்போதைய அதிமுக அரசு. 


இந்த முயற்சிக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்பால் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ ஹிந்தியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தது அதிமுக அரசு. மேலும், ஹிந்திக்கு பதிலாக தெலுங்கு கற்பிக்கப்படும் என்றும் அதற்காக ரூ.3 லட்சம் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இவ்வாறு 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.


முடிவு:


‘தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டம் அதிமுக அரசால் தொடங்கப்பட்டது. இதனை மறைத்து திமுக தான் இந்த திட்டத்தை தொடங்கியதாக சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க