யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள “ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா” நிர்வாகத்தினரை யூடரன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில், கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை அல்ல. 'ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீனின்” கல்லறை. எனவே தான் தர்காவுக்கும் அவர் பெயரே வைக்கப்பட்டுள்ளது” என்று உறுதி செய்துள்ளனர்.
பரவிய செய்தி
மதுரை கோரிபாளையம்_தர்கா உள்ளே சிக்கந்தர்_பாதஷா_கல்லறை உள்ளது என தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்கிறது. இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

விரிவான விளக்கம்
மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தான் சிக்கந்தர் பாட்ஷா கல்லறை உள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்துள்ளதாகவும், திருப்பரங்குன்றம் மலைமேல் அவரது தர்கா இருப்பது பொய் என்றும் பரப்பப்படுகிறது. மேலும் கோரிப்பாளையம் தர்கா 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், TamilnaduTourism. com என்று ஒரு இணையதளப்பக்கமும் அதில் இடம்பெற்றிருந்தது.
மதுரை #கோரிபாளையம்_தர்கா உள்ளே #சிக்கந்தர்_கல்லறை உள்ளது என தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்கிறது. இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
The Dargah complex houses the mausoleum of Hazrat Sultan Sikandhar Badusha and is a favorite spot for devotees. https://t.co/QWxenAzoaG pic.twitter.com/PEeMBB1Kea
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் பதிவில் இருந்த TamilnaduTourism. com இணைதளப்பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது அந்த பக்கத்தின் கடைசியில் Cholan Tours Private Limited என்று குறிப்பிட்டுயிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து இது Cholan Tours என்ற தனியார் சுற்றுலா அமைப்பின் இணையதளப்பக்கம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில், கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் தர்கா தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். ஆனால் அப்படியான எந்த தகவலும் அதில் குறிப்பிடவில்லை.
கோரிப்பாளையம் தர்கா குறித்து வெளியான செய்திகளை ஆய்வு செய்தோம். அப்போது Hindu Tamil, மாலைமலர் போன்ற ஊடகங்களில் கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள "புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் கோரிப்பாளையம் தர்கா 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதா என்பதை பார்த்தோம். அப்போது தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம், பிப்ரவரி 04 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கோரிப்பாளையம் தர்கா 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன்’ பெயரே தர்காவுக்கும் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மதுரை கோரிப்பாளையம் தர்காவில் சிக்கந்தர் பாதுஷா கல்லறை என்று வதந்தி
பரவும் செய்தி
“மதுரை கோரிப்பாளையம் தர்காவில் சிக்கந்தர் பாதுஷா கல்லறை உள்ளது எனத் தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்கிறது. இது 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அப்ப திருப்பரங்குன்றம் மலைமேல் சிக்கந்தர் பாதுஷா… pic.twitter.com/0G4BXjAG4f
இதை மேலும் உறுதி செய்ய, இது குறித்து மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள “ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா” நிர்வாகத்தினரை யூடரன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில், கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை அல்ல. 'ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீனின்” கல்லறை. எனவே தான் தர்காவுக்கும் அவர் பெயரே வைக்கப்பட்டுள்ளது” என்று உறுதி செய்துள்ளனர்.
முடிவு:
எனவே, மதுரை கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை எனக் குறிப்பிட்டு தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்துள்ளது எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது தமிழ்நாடு அரசின் இணையதளமே அல்ல. “சோழன் டூர்ஸ்” என்ற தனியார் சுற்றுலா அமைப்பின் இணையதளம். மேலும் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது, “ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா” என்று அதன் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர்.