YouTurn

நான் முதல்வன் திட்டம் மூலம் ராஜேஷ்வரி பயன்பெறவில்லை என்று பரவும் பொய் செய்தி!

நான் முதல்வன் திட்டம் மூலம் ராஜேஷ்வரி பயன்பெறவில்லை என்று பரவும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது குறித்து பேட்டியளித்துள்ள ராஜேஷ்வரி, 2018ல் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து படித்தாகவும், பின்பு குரூப்-1 பயிற்சி அப்போலோ நிறுவனத்தில் பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு நான் முதல்வன் திட்டத்தின் பயனாளி என்றும், ஆசிரியர் உதவி, நிதியுதி அதில் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரவிய செய்தி

ஸ்டாலின் அரசின் பித்தலாட்டம் அம்பலம்....

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

2025- ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் எனப்படும் யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மார்ச் 06 அன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவி அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இதையடுத்து அவர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் ராஜேஷ்வரி நான் முதல்வன் திட்டம் மூலம் பயன்பெறவில்லை என்றும், தனியார் நிறுவனத்தில் தான் பயிற்சி பெற்றார் எனவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ETV Bharat ஊடகத்தில் ”கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவேன்:யுபிஎஸ்சி தேர்வில் 2ஆம் இடம் பிடித்த ராஜேஸ்வரி உறுதி” என்ற தலைப்பில் மார்ச் 06, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில்  ETV Bharat ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், 'நான் முதல்வன்' திட்டத்தில் வழங்கப்படும் நிதி எனக்கு பேருதவியாக இருந்தது. முதல்நிலை தேர்வுக்கே மாதம் ரூ. 7500 தருகிறார்கள். இது மாணவர்கள் சுயமாக படிப்பதற்கான நம்பிக்கையை கொடுக்கிறது என கூறினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடியப் போது, ND TV ஊடகத்தில் “Tamil Nadu’s Rajeswari Suve Secures UPSC Air 2 In Fifth Attempt” என்று குறிப்பிட்டு அவர் பேட்டியளித்த முழு வீடியோவும் இடம்பெற்றிருந்தது. அதில் சரியாக 1:50 நிமிடத்தில் இதற்காக எந்த மாதிரியான பயிற்சி எடுத்தீர்கள் என்று செய்தியாளர் கேட்கிறார். அதற்கு பதிலளித்த ராஜேஷ்வரி, 2018ல் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து படித்தாகவும், பின்பு குரூப்-1 பயிற்சி அப்போலோ நிறுவனத்தில் பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு நான் முதல்வன் திட்டத்தின் பயனாளி என்றும், ஆசிரியர் உதவி, நிதியுதவி கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 


முடிவு: 

எனவே, UPSC தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாது இடம் பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஷ்வரி, நான் முதல்வன் திட்டம் மூலம் பயன்பெறவில்லை என்று பரவும் தகவல் தவறானவை. தான் ஒரு ”நான் முதல்வன்” திட்டத்தின் பயனாளி என்று அவரேபல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க