யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் இன்று நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கான ரம்ஜான் பரிசு தொகுப்பு, ஆம் இது எல்லாருக்குமான ஆட்சி அதற்காகத்தான் பொங்கலுக்கு நமக்கு இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கவில்லை..
விரிவான விளக்கம்
ரமலான் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
"முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை" என்று பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ரமலான் பண்டிக்கைக்கு முதல்வரால் தற்போது 2500 பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது உண்மையே என்பதை அறிய முடிந்தது.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் எந்த பரிசுத் தொகுப்பினையும் வழங்கவில்லை என்று பரவும் செய்திகள் தவறானவை. ரமலானுக்கு வழங்கியது போன்றே, ஜனவரி 11, 2025 அன்று தனது கொளத்தூர் தொகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் 1000 நபர்களுக்கு பொங்கல் பரிசுப் தொகுப்பினை அவர் வழங்கியுள்ளார்.
இது குறித்த செய்திகளை அமைச்சர் சேகர்பாபுவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது. மேலும் அப்பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.01.2025), கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ‘சமத்துவப் பொங்கல் விழா - 2025’-இல் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ - மாணவியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து, 1000 நபர்களுக்கு புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், கரும்பு, குடை, பரிசுப் பொருட்கள் உள்ளடக்கிய பொங்கல் பரிசுப் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.