YouTurn

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் போட்டியிட்ட திருமாவளவன் எனப் பரவும் தவறான செய்தி!

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் போட்டியிட்ட திருமாவளவன் எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதை தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

கர்நாடகாவில் இருந்து வந்த பண்டாரம் எப்படி எழுர்ச்சி தமிழன் ஆனான்? யாராவது சிந்தித்தது உண்டா?



X Link | Archive Link

விரிவான விளக்கம்

விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் போட்டியிட்டுள்ளார் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

மேலும் பரவி வரும் பதிவுகளில், “அவர் தமிழ்நாட்டில் போட்டியிடாமல் கர்நாடகாவில் போட்டியிட்டு தான் எழுச்சி தமிழர் ஆகியுள்ளார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து தேடிப் பார்த்ததில், இது கர்நாடகாவில் உள்ள மங்களூர் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


One India Tamil” பரவி வரும் செய்திகள் குறித்து “மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டி“ என்ற தலைப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தங்களது கட்சியினர் போட்டியிடும் 2 வது வேட்பாளர்பட்டியலையும் அறிவித்தார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதனை உறுதி செய்ய தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் குறித்து கூகுள் வரைபடத்திலும் ஆய்வு செய்து உறுதி படுத்தியுள்ளோம். 




முடிவு: 


நம் தேடலில், கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதை கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரில் அவர் போட்டியிட்டதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க