YouTurn

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு இல்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு  இல்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்’ கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 27, 2025 அன்று இந்த திட்டத்தின் கீழ் கடைசி ஸ்மார்ட் போர்டை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பரவிய செய்தி

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு வைக்கப்படும் என்று கூறிய அரசு ஒரே போர்டை அனைத்து பள்ளிகளையும் வைத்து போட்டோ சூட் நடத்தி விட்டு சென்றிருக்கிறது இப்பொழுது எந்த பள்ளியிலும் டிஜிட்டல் போர்டு இல்லை திருட்டு திமுகவின் தில்லுமுல்லு அம்பலம்.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

ஒரே டிஜிட்டல் போர்டை அனைத்து அரசு பள்ளிகளிலும் வைத்து போட்டோ சூட் நடத்தப்பட்டதாகவும், இப்போது எந்த பள்ளியிலும் டிஜிட்டல் போர்டு இல்லை என்றும்  தமிழ் ஜனம் ஊடகத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

அரசு பள்ளியில் டிஜிட்டல் போர்டு இருப்பது குறித்து keywords மூலம் கூகுளில்  தேடிப் பார்த்தோம். அப்போது Sun News ஊடகத்தில் ஜனவரி 27, 2025 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க 'திறன்மிகு வகுப்பறை' திட்டத்தின் கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, Kalaignar ஊடகத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. அதில் 'திறன்மிகு வகுப்பறை' திட்டத்தின் மூலம் 22,931 அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டை கொண்டு சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 27, 2025 அன்று கடைசி ஸ்மார்ட் போர்டை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மேலும் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் காஞ்சிபுரம், கோவை, கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது என்பதை பல்வேறு செய்திகளில் வெளியானது மூலம் அறிய முடிந்தது. 


முடிவு: 

எனவே, ஒரே டிஜிட்டல் போர்டை அனைத்து அரசு பள்ளிகளிலும் வைத்து போட்டோ சூட் நடத்தப்பட்டதாகவும், இப்போது எந்த பள்ளியிலும் டிஜிட்டல் போர்டு இல்லை என்றும் பரவும் செய்தி தவறானவை. ‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்’ கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க