YouTurn

கரூர் சம்பவம் குறித்து நடிகர் சூரி கருத்து தெரிவித்ததாக பரவும் தவறான செய்தி!

கரூர் சம்பவம் குறித்து நடிகர் சூரி கருத்து தெரிவித்ததாக பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாகப் பரவி வரும் செய்திகள் போலியானவை. இது குறித்து எந்த கருத்தையும் தான் கூறவில்லை என்று நடிகர் சூரி உறுதிபடுத்தியுள்ளார்.

பரவிய செய்தி

பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்!

ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு TALI போட்டுவிட்டுது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார்.

- நடிகர் சூரி

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது நடந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை காண தவெகவின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. 

இந்நிலையில் பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும். 

ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாக Political talkies என்ற சமூக ஊடகப்பக்கத்தில் இருந்து நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த நியூஸ் கார்ட்டில் உள்ளது போல், ஏதேனும் Main stream ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். இப்படி நடிகர் சூரி கூறியதாக எதிலும் செய்தி வெளியாகவில்லை. 


இதையடுத்து சூரி அண்மையில் அளித்த பேட்டிகளை தேடிப் பார்க்கும் போது, பரவி வரும் செய்தியில் உள்ளது போல் எதிலும் பேசவில்லை. அவரது சமூக வலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்த போது, கரூர் சம்பவம் குறித்து எந்த பதிவுகளும் அவர் வெளியிடவில்லை என்பதையும் பார்க்கமுடிந்தது. 


image.png


மாறாக நடிகர் சூரியின் எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் அந்த நியூஸ் கார்ட் குறித்து கருத்து தெரிவித்திருந்ததை பார்க்கமுடிந்தது. இது போலியான நியூஸ் கார்ட் என்று குறிப்பிட்ட அவர், தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்கு தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம். இந்த சமூகம் நல்ல மாற்றங்களைப் பெற தகுதியானது. அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

image.png

முடிவு: 

எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாகப் பரவி வரும் செய்திகள் போலியானவை. இது குறித்து எந்த கருத்தையும் தான் கூறவில்லை என்று நடிகர் சூரி உறுதிபடுத்தியுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க