YouTurn

சீனாவில் ஏவப்பட்ட ராக்கெட் விழுந்து நொறுங்கும் காட்சி எனப் பரவும் தவறான செய்தி!

சீனாவில் ஏவப்பட்ட ராக்கெட் விழுந்து நொறுங்கும் காட்சி எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

சீனா ஜிசாங்கில் இருந்து ஏவிய ராக்கெட் விழுந்து நொறுங்கியது..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

சீனாவில் ஜூன் 22 அன்று லாங் மார்ச் 2C ராக்கெட் (Long March 2C Rocket), SVOM செயற்கைக்கோளை ஏற்றிக்கொண்டு, ஜிசாங் (Xichang) செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து புறப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் ஜிசாங்கில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட், மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், மக்கள் குடியிருப்பு பகுதியில் வானிலிருந்து ஒரு விண்பொருள் விழுவதுபோன்றும், அதைப்பார்த்து மக்கள் அஞ்சி ஓடுவதையும் காணமுடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், சீனாவின் ஜிசாங் (Xichang) செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து ஏவப்பட்ட The Long March 2C எனப்படும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்பதை அறியமுடிந்தது. 



News18 ஊடகம் இதுகுறித்து "வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு சீன செயற்கைக்கோளின் மீதமுள்ள பகுதிகள் (Debris) மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்தது" என்ற தலைப்பில் ஜூன் 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில், 'லாங் மார்ச் 2C' ராக்கெட், SVOM செயற்கைக்கோளை ஏற்றிக்கொண்டு, ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு Xichang செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து புறப்பட்டது. வெற்றிகரமாக ஏவப்பட்ட போதிலும், ராக்கெட்டில் இருந்து ராக்கெட் பூஸ்டர் குப்பைகள் விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே மக்கள் வசிக்கும் பகுதியின்மீது விழுந்ததாக விண்வெளி செய்திகள் தெரிவிக்கின்றன" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பொதுவாக ராக்கெட்டுக்கு உந்துசக்தியை கொடுக்க ராக்கெட் பூஸ்டர்கள் இருக்கும். அவை எரிபொருளை கொடுத்து முடித்த பின்னர் ராக்கெட்டிலிருந்து கடலில் விழும். இதனை Rocket Debris என்பார்கள். இதுதான் தற்போது சீனாவில் மக்கள்வாழும் பகுதியில் விழுந்துள்ளது. 

மேலும் பரவி வரும் இதே வீடியோ, Times Now ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில்,"பார்க்க | சீன ராக்கெட் குப்பைகள் மீண்டும் பூமியில் விழுந்து குடியிருப்பு பகுதிக்கு அருகில் வெடித்து சிதறுவதால் மக்கள் பாதுகாப்பிற்காக ஓடுகிறார்கள்" என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.



இதன்மூலம், சீனாவில், லாங் மார்ச் 2C ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அதில் எரிபொருள் நிரப்புவதற்காக அனுப்பப்பட்ட ராக்கெட் பூஸ்டர்கள், எரிபொருளை கொடுத்து முடித்த பின்னர் குப்பைகளாக (Rocket Debris) மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளன என்பதையும், இதை பலரும் சீனாவில் ஏவப்பட்ட ராக்கெட்தான் தோல்வியடைந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததாகக்கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறியமுடிகிறது. 

மேலும் படிக்க: விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான்-3 ஏவப்பட்ட காட்சி எனப் பரவும் SpaceX ராக்கெட் வீடியோ !

முடிவு:

நம் தேடலில், சீனாவில் ஏவப்பட்ட ராக்கெட் விழுந்து நொறுங்கும் காட்சி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க