YouTurn

2026 சட்டமன்ற தேர்தலுக்கான சர்வே முடிவுகள் என்று பரவும் தவறான தகவல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான சர்வே முடிவுகள் என்று பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உண்மையான கருத்துக்கணிப்பில் “இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 38% பேர், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று 33% பேர், தவெக வெற்றி பெறும் என 22% பேர், நாதக வெற்றி பெறும் என்று 7% பேர் தெரிவித்துள்ளனர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

#மடக்கு_ஊதிகளா என்னயா 3% இந்த முக்கு முக்குது

மொதல்ல 234 தொகுதியில  டெபாசிட் வாங்க முடியுமான்னு பாருங்கடா பனையூர் தற்குறிகளே

சமீபத்திய சர்வே விவரங்கள் சொல்லும் தகவல்:

"திமுக ஆட்சிக்கு வரக்கூடாது,

அதே நேரம் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். 

#EPSfor2026

ADMK For 2026

X Link / Archived Link

விரிவான விளக்கம்

சாணக்யா ஊடகத்தின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான எடுத்த சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளதாகவும், அதில் அதிமுக 54%, திமுக 40%, தவெக 3%, நாதக 3% வாக்குகளை பெறும் என்றும் தெரிவித்து பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 



உண்மை என்ன? 

இதையடுத்து முதலில் சாணக்யா ஊடகத்தி சட்டமன்ற தேர்தலுக்கான சர்வே முடிவுகள் ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். அப்போது தினமலர் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், சாணக்யா & தினமலர் ஊடகங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பை பார்க்கமுடிந்தது. ”2026 தமிழக சட்டசபை தேர்தல் | அரியணை யாருக்கு? | Dinamalar–Chanakyaa Survey | Rangaraj Pandey | 02” என்ற தலைப்பில் ஜனவரி 28 அன்று அந்த வீடியோ வெளியாகியிருந்தது. 


அதில் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் அதிமுக கூட்டணிக்கு 38% பேர், திமுக கூட்டணிக்கு 33% பேர், தவெகவுக்கு 22% பேர், நாதகவுக்கு 7% பேர் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 


இது குறித்து சாணக்யா ஊடகத்திலும் ஜனவரி 29 அன்று நியூஸ் கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா&தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 38% பேர், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று 33% பேர், தவெக வெற்றி பெறும் என 22% பேர், நாதக வெற்றி பெறும் என்று 7% பேர் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான எடுத்த சர்வே முடிவுகள் என்று பரவும் தகவல் தவறானது. உண்மையான கருத்துக்கணிப்பில் “இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 38% பேர், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று 33% பேர், தவெக வெற்றி பெறும் என 22% பேர், நாதக வெற்றி பெறும் என்று 7% பேர் தெரிவித்துள்ளனர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க