யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம். உண்மையான புகைப்படத்தில், “நாகைக்கு வரும் எங்கள் நாளைய தீர்ப்பே வருக” என்று தான் உள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி செப்டம்பர் 20 அன்று நாகப்பட்டினம், திருவாரூரில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.
இந்நிலையில் இந்த மக்கள் சந்திப்பில், தவெக கட்சியைச் சேர்ந்த ஒருவர், “நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக“ என்று எழுதப்பட்டிருந்த பதாகையை வைத்திருந்தார் என்று கூறி புகைப்படம் ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
#சனியின்_பயணம் pic.twitter.com/SKs0xIA0LM
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
‘PriyankaSmile01‘ என்ற பயனரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் பதாகையின் உண்மையான புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், “நாகைக்கு வரும் எங்கள் நாளைய தீர்ப்பே வருக“ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, ‘abpnadu’ ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், “நாகைக்கு வரும் எங்கள் நாளைய தீர்ப்பே வருக“ என்று குறிப்பிட்டே பதாகையில் எழுதப்பட்டிருந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதன் மூலம் உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, “நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக“ என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தவெக கட்சியைச் சேர்ந்த ஒருவர், “நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக“ என்று எழுதப்பட்டிருந்த பதாகையை வைத்திருந்ததாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது.