யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உண்மையான புகைப்படத்தை Edit செய்து தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருப்பது போல் போலியான புகைப்படத்தை பரப்பைவருகிறார்கள்.
பரவிய செய்தி
இதை மட்டும் ராமசாமி நாயக்கர் பாத்தான்னா…
செருப்புக்கு காவல் காக்க திட்டமிட்டு தானடா ஶ்ரீரங்கத்தில் என்னை உக்கார வைச்சிங்கன்னு கேப்பான்….

விரிவான விளக்கம்
திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரச்சன்னா என்பவர், நெற்றி முழுவதும் விபூதி பட்டை பூசியிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இது தான் பெரியாரும் திமுகவும் பேசிய கடவுள் மறுப்பு பகுத்தறிவா என்று கேள்வி எழுப்பும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.
இதை மட்டும் ராமசாமி நாயக்கர் பாத்தான்னா…
செருப்புக்கு காவல் காக்க திட்டமிட்டு தானடா ஶ்ரீரங்கத்தில் என்னை உக்கார வைச்சிங்கன்னு கேப்பான்…. pic.twitter.com/FoBdUozgz0
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, தமிழன் பிரச்சன்னா-வின் ‘எக்ஸ்’ தளத்தில் இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது.
உடலும்,கண்களும் கடும்
உறக்கம் கேட்கின்றது...
தலைவர் இட்ட கட்டளை
உள்ளத்தில் தகிக்கின்றது...#ஸ்டாலின்தான்வராறுவிடியல்தரபோராறு @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @DMKITwing pic.twitter.com/tfQsBbSG1h
2021 ஏப்ரல் மாதம் அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள அந்த புகைப்படத்தில் அவரது நெற்றியில் விபூதி பட்டை இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தமிழன் பிரச்சன்னா பதிவேற்றம் செய்துள்ள புகைப்படத்தை Edit செய்து அவர் விபூதி பட்டை பூசியிருப்பது போல் போலியான புகைப்படத்தை உருவாக்கி பரப்பிவருகிறார்கள்.
முடிவு:
Edit செய்து உருவாக்கப்பட்ட போலியான் புகைப்படத்தை கொண்டு, திமுகவில் இருக்கும் தமிழன் பிரச்சன்னா அதன் கொள்கைக்கு விரோதமாக விபூதி பட்டை பூசியிருப்பதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.