YouTurn

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்த விஜய் எனப் பரவும் போலியான புகைப்படம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்த விஜய் எனப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் விழும் தவெக தலைவர் விஜய் எனப் பரவும் புகைப்படம் போலியானது. புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் விஜய் அல்ல. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

சிங்கம் வேட்டைக்கு சென்ற போது கிளுக்கியது.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுவதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 




உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் விஜய் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


‘Outlook India’ இணையதளப் பக்கத்தில், பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் ஜெயலலிதாவின் காலில் விழுவது நடிகர் விஜய் அல்ல என்பது உறுதியானது. 



இதே போன்று, ‘OneIndia Tamil’ ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 


இந்நிலையில், உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவெக தலைவர் விஜய், ஜெயலிதாவின் காலில் விழுவது போல தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முடிவு: 


நம் தேடலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் விழும் தவெக தலைவர் விஜய் எனப் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.