யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உண்மையான புகைப்படத்தில் “மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்)” என்ற தலைப்பே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, புத்தகத்தின் மேல் தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" என்று இருப்பது போல தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சியில் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிய ஒரே புத்தகம்
விரிவான விளக்கம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 08 முதல் ஜனவரி 21 வரை நடைபெற்றது. இந்நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவரான சுப. வீரப்பாண்டியன் எழுதிய புத்தகத்தின் பெயர் "தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" என்று குறிப்பிடப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் பதிவுகளில், “சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சியில் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிய ஒரே புத்தகம்” என்று குறிப்பிட்டும் பரப்பப்படுகிறது.
இந்த புத்தகம் எங்க கிடைக்கும் pic.twitter.com/f6wYplDJ3y
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “The Kevin Paul Show” என்ற எக்ஸ் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அதில், “புத்தகத்தின் தலைப்பு “மொழியும் வாழ்வும்” என்று குறிப்பிட்டு கடந்த ஜனவரி 10 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
புத்தகத்தின் தலைப்பு “மொழியும் வாழ்வும்.”
மொழி குறித்தும் வாழ்வை மேம்படுத்துவது குறித்தும் நம் ஐயா நமக்காக எழுதி வைத்திருக்கிறார் என ஆர்வத்தின் உச்சிக்கே சென்று திறந்து பார்த்தால்... pic.twitter.com/TYX8fAWEkS
“மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்)” என்ற புத்தகம் குறித்து ஆய்வு செய்ததில், சுப வீரபாண்டியன் அவர்களால் எழுதப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
உண்மையான புகைப்படத்தில் “மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்)” என்ற தலைப்பே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, புத்தகத்தின் மேல் "தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" என்று இருப்பது போல தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:
நம் தேடலில், சுப. வீரபாண்டியன் எழுதிய “தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" புத்தகம் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது.