யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’தினமலர் - சாணக்யா’ நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியாக Edit செய்து தவெக அதிக சதவீத வாக்குகளை பெற்றதாக தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
’தினமலர்’ மற்றும் ‘சாணக்யா’ ஊடகங்கள் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகள் பெரும் என்றும், தவெக 32 சதவீத வாக்குகள் பெறும் என்றும், அதிமுக 26 சதவீத வாக்குகள் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
🚨சாணக்யா + தினமலர் கருத்துக்கணிப்பு
தவெக 32%
திமுக 37%
அதிமுக 26%
நாதக 5% pic.twitter.com/TeDYO0KH6R
உண்மை என்ன?
’தினமலர் - சாணக்யா’ நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு பற்றிய செய்திகளைத் தேடியபோது, ’சாணக்யா’ யூட்யூப் தளத்தில் இந்த கருத்து கணிப்பு பற்றி ரங்கராஜ் பாண்டே பேசிய வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது.
ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகியுள்ள அந்த வீடியோவில், தேர்தல் கருத்துக் கணிப்பின் முடிவுகள் பற்றிய வரைபடத்தை (chart) காணமுடிந்தது. அதில், அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகள் பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகள் பெறும் என்றும், தவெக கட்சி 18 சதவீத வாக்குகள் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, உண்மையான கருத்துக் கணிப்பில் இருக்கும் விவரங்களை மாற்றி போலியாக Edit செய்து, தவெக அதிமுக கூட்டணியை விட அதிக வாக்குகள் பெறும் என்று தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
’தினமலர் - சாணக்யா’ நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியாக Edit செய்து தவெக அதிக சதவீத வாக்குகள் பெறவிருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
