YouTurn

அரசின் பணத்தை மக்களுக்கு கொடுக்கத் தடைகோரி மனுவா? பரவும் போலி நியூஸ்கார்டு!

அரசின் பணத்தை மக்களுக்கு கொடுக்கத் தடைகோரி மனுவா? பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பெயரை வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு” என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்ட “நியூஸ் ஜெ” ஊடகத்தின் நியூஸ் கார்டை, “பணம் கொடுக்க தடைகோரி மனு” என்று எடிட் செய்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

பணம் கொடுக்கத் தடைகோரி மனு; மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடியும்வரை தடைவிதிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வருகின்ற 2026-ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருவதையடுத்து, பணம் கொடுக்கத் தடைகோரி மனு என்று குறிப்பிட்டு நியூஸ் ஜெ ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் பரவி வரும் கார்டில், “மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. 


கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தேடிப் பார்த்ததில், ஆகஸ்ட் 01 அன்று “ஸ்டாலின் பெயரை வைக்க தடை; தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு” என்று குறிப்பிட்டு நியூஸ் ஜெ ஊடகப் பக்கத்தில் நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. 



எனவே “ஸ்டாலின் பெயரை வைக்க தடை“ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. 



மேலும் இது குறித்து, நியூஸ் ஜெ ஊடகப் பக்கத்திலும், “இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை, எங்கள் பெயரில் போலி பதிவு” என்று மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர். 



முடிவு: 


நம் தேடலில்,  “பணம் கொடுக்கத் தடைகோரி மனு” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ் ஜெ ஊடகத்தின் நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க