யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகக் கூறியும், “நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை” என சபாநாயகர் அப்பாவு கூறியதாகக் கூறியும் பரவி வரும் நியூஸ்கார்டுகள் போலியானவை.
பரவிய செய்தி
பரவிய செய்தி 1:
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் - அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா

பரவிய செய்தி 2:
“நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை” - சபாநாயகர் அப்பாவு

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பை பரபரப்பாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகக் கூறியும், “நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை” என சபாநாயகர் அப்பாவு கூறியதாகக் கூறியும் நியூஸ்கார்டுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
Super thanks pic.twitter.com/33rJwlfMWL
மதம் மாறியவன் நாடார் அல்ல.! அவர்களுக்கு
கிறிஸ்தவன் என்று பெயர்.
இந்து மதத்தில் இருப்பவர்களே நாடார்கள்
அவர்கள் தான் உண்மையான இந்துக்கள். pic.twitter.com/xHujyMbyVR
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டுகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம்.
முதலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தமிழ் ஜனம் ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதன் படி, “போலியான செய்தி. தமிழ் ஜனம் சார்பில் இந்த செய்தி பதிவிடப்படவில்லை” என்று குறிப்பிட்டு மார்ச் 30 அன்றே இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தனர்.
போலியான செய்தி தமிழ் ஜனம் சார்பில் இந்த செய்தி பதிவிடப்படவில்லை
#fakenews #nda #admk #newscard #tamiljanam pic.twitter.com/a7ysKwYQt7
இதே போன்று பரவும் மற்றொரு நியூஸ் கார்டு குறித்து, ‘News 7’ ஊடகப் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அதன்படி, “நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை - அப்பாவு“ என்று குறிப்பிட்டு அவர்கள் பக்கத்தில் எந்த செய்தியும் வெளியிடவில்லை.


முடிவு:
நம் தேடலில், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நியூஸ்கார்டுகளும் போலியானவை என்பது உறுதியாகிறது.