யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“திமுகவிற்கு ஓட்டு போட மாட்டேன் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம்” எனக் கூறி பரவும் நியூஸ் கார்டு போலியானது. இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கிய நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் “விசிகவுக்கு ஒற்றை இலக்க தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடமாட்டேன்!
என உதயநிதியின் நண்பரும், இயக்குநருமான மாரி செல்வராஜ் கூறியிருந்த நிலையில், விசிக-விற்கு எட்டு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது திமுக” என்று குறிப்பிட்டு இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சகோ @mari_selvaraj என்ன தான் நீ தெலுங்கனுங்களுக்கு படம் எடுத்து, பாட்டு எழுதி அவனுங்க கூட சுமுகமா இருந்தாலும்...
அவனுங்க உங்களை மயிரா தான் பார்ப்பானுங்க....
தெலுங்கர்களின் இனவெறி அறியாமலா, புரியாமலா இங்க உக்காந்து எழுதிட்ருக்கோம்..
உம் படம் ஓடனுன்னு அன்னிக்கி நான் தான்… pic.twitter.com/tzD0VlrgsH
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து இயக்குநர் மாரிசெல்வராஜின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து செய்திதளங்களிலும் தேடிப்பார்த்தோம். எந்த செய்தியிலும், மாரிசெல்வராஜ் கூறியதாகக் கூறி இது போன்ற செய்திகள் வெளியிடப்படவில்லை.
மேலும் இதனை உறுதி செய்ய, இயக்குநர் மார்செல்வராஜை யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டுகொண்டு பேசியதில், “பரவி வரும் செய்தி போலியானது. இது குறித்து எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை” என்று நமக்கு உறுதிபடுத்தினார்.

முடிவு:
நம் தேடலில், “திமுகவிற்கு ஓட்டு போட மாட்டேன் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம்” எனப் பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.