யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது. 'நியூஸ் 18 தமிழ்நாடு' இது குறித்து எந்த நியூஸ்கார்டும் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை காண தவெகவின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில் கரூரில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்க அவர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்துள்ளதாகவும், வார இறுதிக்குள் அவர்களை பனையூருக்கு அழைத்துவர நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று டெரெண்டாகி வருகிறது.
அடப்பாவி இதுக்கு கூட நேரா போக மாட்டியா 😡😡 pic.twitter.com/q5fjXVSu5L
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் நியூஸ் கார்ட்டில் 06-10-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் சமூக வலைதளப்பக்கங்களில் தேடினோம். அப்போது அதே அக்டோபர் 6, 2025 அன்று ”மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தொலைபேசி மூலம் ஆலோசனை” என்ற தலைப்பில் ஒரு நியூஸ் கார்ட் வெளியிடப்பட்டிருந்தது.
#JUSTIN மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தொலைபேசி மூலம் ஆலோசனை #Vijay #TVK #KarurStampede #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/qmlIXG04be
அதில் கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தவெக மாவட்டச் செயலாளர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய தவெக தலைவர் விஜய். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து கருத்துக்களை கேட்டறிந்ததாக தகவல்; பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்று அறிவுரை என தகவல்; விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்ட்டை தான் எடிட் செய்து பரப்புகின்றனர் என்பது தெளிவானது.
ஆனால் இதை மேலும் உறுதி செய்ய வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது அக்டோபர் 7, 2025 அன்று ”கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் பனையூருக்கு அழைத்ததாக நியூஸ் 18 பெயரில் Fake Card” என்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது என்பதை அவர்களின் சமூக வலைதளப்பக்கங்களில் உறுதி செய்ததை காணமுடிந்தது.
#JUSTIN கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் பனையூருக்கு அழைத்ததாக நியூஸ் 18 பெயரில் Fake Card #FakeCard #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/dR1ByHaQkD
முடிவு:
நம் தேடலில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது. 'நியூஸ் 18 தமிழ்நாடு' இது குறித்து எந்த நியூஸ்கார்டும் வெளியிடவில்லை.
