YouTurn

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த ஜெயக்குமார் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த ஜெயக்குமார் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்ததாகக் கூறி மார்ச் 20, 2015 தேதியிட்ட, புதியதலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

அதிமுகவிலிருந்து விலகி விடுவேன்; பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் - பத்திரிகையாளர் கேள்விக்கு ஜெயக்குமார் பதில்


X Link | Archive Link

விரிவான விளக்கம்

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்ததாகக் கூறி மார்ச் 20, 2025 தேதியிடப்பட்ட, புதியதலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


உண்மை என்ன?


பரவி வரும் செய்தி குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஏதாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்து அவருடைய சமூக ஊடகப்பக்கங்களை ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து அவர் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் இது குறித்து ஏதாவது செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்பது குறித்து தேடியதிலும், பரவி வரும் நியூஸ்கார்டை அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.


மேலும் இதை உறுதிபடுத்துவதற்காக, இது குறித்து புதியதலைமுறையிடம் நம் யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்புகொண்டு பேசினோம்.  அவர்கள் “இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை, இது போலியான நியூஸ்கார்டு”  என்று நமக்கு உறுதிபடுத்தினர்.



முடிவு:


நம் தேடலில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்ததாகக் கூறி பரவி வரும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.