YouTurn

திருமாவளவன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலியான நியூஸ்கார்டு!

திருமாவளவன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலியான நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வெளியிடப்பட்ட புதிய தலைமுறையின் நியூஸ்கார்டை, எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.


Facebook Link

விரிவான விளக்கம்

அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.


அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று கூறியதாகக் கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து, புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர்கள் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் ஆய்வு செய்தபோது, “சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிட்டு அவர்கள் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்ததையே காண முடிந்தது. 


#MKStalin | #Thirumavalavan | #DMK | #VCK pic.twitter.com/PskndkPZBd

— PttvOnlinenews (@PttvNewsX) July 15, 2025


இந்நிலையில், உண்மையான நியூஸ் கார்டை எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 



முடிவு: 


நம் தேடலில், சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வெளியிடப்பட்ட புதிய தலைமுறையின் நியூஸ்கார்டை, எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க