YouTurn

சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறிய இபிஎஸ் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறிய இபிஎஸ் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறி தினமலரின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குலைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளும், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தவெக உள்ளிட்ட கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். 


இதனையடுத்து, வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறி தினமலரின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் நியூஸ் கார்டில், “ நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குலைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. 


#WaqfAmendmentBill pic.twitter.com/aglE8UHd2u

— Vetriselvan Sankar DMK (@kunavasalVETRI) April 18, 2025


Facebook Link:


உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது போலியான நியூஸ் கார்டு என்பதை அறிய முடிந்தது. 


இது குறித்து தினமலர் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். “சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது” என்று இபிஎஸ் கூறுவது போன்று தினமலர் ஊடகம் எந்த நியூஸ்கார்டையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது


மேலும் இது குறித்து அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரின் எக்ஸ் பக்கத்திலும் தேடிப் பார்த்தோம். அதில், “சிறுபான்மையினருக்கும், இந்திய நீதித் துறைக்கும் எதிரான ஒரு கருத்தை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் கூறியதாக தி.மு.க.வினரால் சமூக ஊடகங்களில் போலி நியூஸ் கார்டு பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது!” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். 


#FakeNewsAlert

சிறுபான்மையினருக்கும், இந்திய நீதித் துறைக்கும் எதிரான ஒரு கருத்தை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் கூறியதாக தி.மு.க.வினரால் சமூக ஊடகங்களில் போலி நியூஸ் கார்டு பரப்பப்பட்டு வருகிறது.

இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது! pic.twitter.com/2UDBS4xIqW

— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) April 18, 2025


இதன் மூலம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குலைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில் என்று குறிப்பிட்டு பரவி வரும் தினமலரின் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. . 


முடிவு: 


நம் தேடலில், வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் கூறிப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க