யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நெல்லையில் தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறுசுவை விருந்து வைத்துள்ளார். அதில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படாததால் பரபரப்பு ஏற்ப்பட்டதாக புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் காரட் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டில் 26/07/2025 என்று தேதி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதை வைத்து புதிய தலைமுறை ஊடகத்தில் இப்படியான நியூஸ் கார்ட் வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது அதன் எக்ஸ் பக்கத்தில் “தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் விருந்து” என்ற தலைப்பில் இரண்டு நியூஸ் கார்ட் ஜூலை 26,2025 அன்று வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் பரவி வரும் நியூஸ் கார்டும் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் விருந்து
#NainarNagendran | #BJP | #Nellai | #Annamalai pic.twitter.com/s4kaIVLikz
ஆனால் அதில் நெல்லையில் தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறுசுவை விருந்து வைத்துள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், - ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு விருந்து என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எடிட் செய்து தான் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படாததால் பரபரப்பு பரப்புகின்றனர்.
முடிவு:
எனவே, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவுவது போலியான செய்தியாகும். உண்மையான நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.