யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிசை எண் 295 இல் 'வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்' என்றும், வரிசை எண் 419 இல் 'இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்' என்றும் வாக்குறுதி அளித்துள்ளதாகப் பரப்பப்படும் படம் போலியானது. திமுக வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில், அப்படி எந்த வாக்குறுதிகளையும் குறிப்பிடவில்லை.
பரவிய செய்தி
வரிசை எண் -419 ஐப் பாருங்க.. இது உண்மையென்றால்.. திமுக என்னும் விஷக் கிருமியை ஜெயிக்க வைத்தால் இவனுங்க கடந்த ஆட்சியில் இடித்த பல கோவில்கள் போல்..
அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கோவில் நிலத்தை குத்தகைகக்கு எடுத்தவங்களுக்கே நிலத்தை கொடுப்பானுங்களாம்.
என்ன ஒரு தெனாவெட்டு..

விரிவான விளக்கம்
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிசை எண் 295 இல் 'வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்' என்றும், வரிசை எண் 419 இல் 'இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்' என்றும் வாக்குறுதி அளித்துள்ளதாகப் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
வரிசை எண் -419 ஐப் பாருங்க.. இது உண்மையென்றால்.. திமுக என்னும் விஷக் கிருமியை ஜெயிக்க வைத்தால் இவனுங்க கடந்த ஆட்சியில் இடித்த பல கோவில்கள் போல்..
அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கோவில் நிலத்தை குத்தகைகக்கு எடுத்தவங்களுக்கே நிலத்தை கொடுப்பானுங்களாம்.
என்ன ஒரு தெனாவெட்டு..😡😡 pic.twitter.com/v18Av0HZG7
உண்மை என்ன?
முதலில் திமுக வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில் இது போன்ற ஏதேனும் வாக்குறுதியில் இருக்க என்பதை தேடிப் பார்த்தோம். அதில் வரிசை எண் 295ம் வரிசை எண் 419 என்று எந்த எண்ணிக்கையும் இல்லை. இதையடுத்து வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதா என்பதை பார்த்தோம், அப்போது அப்படி எந்த வாக்குறுதிகளையும் குறிப்பிடவில்லை.
மாறாக திருக்கோவில் திருப்பணிகள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகளை பார்த்தோம். அதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யப்படும். திருக்கோவில்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 10 கோடி, ரூபாய் 25 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். தற்போது 770 திருக்கோவில்களில் நடைபெற்று வரும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம், மேலும் 50 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளது.

முடிவு:
எனவே, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிசை எண் 295 இல் 'வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்' என்றும், வரிசை எண் 419 இல் 'இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்' என்றும் வாக்குறுதி அளித்துள்ளதாகப் பரப்பப்படும் படம் போலியானது. திமுக வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில், அப்படி எந்த வாக்குறுதிகளையும் குறிப்பிடவில்லை.