YouTurn

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!

பரவிய செய்தி

நான் நிறைய புத்தகங்களை படித்து இருக்கிறேன் - எடப்பாடி !! 


 

X Link / Archived Link

விரிவான விளக்கம்

"அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லாததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பாலிமர் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று பரவி வருகிறது. 


 

உண்மை என்ன?


பரவி வரும் நியூஸ் கார்டில் 22-07-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதை வைத்து பாலிமர்  ஊடகத்தில் இப்படியான நியூஸ் கார்ட் வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது தனிக்கட்சி மெஜாரிட்டி ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்ற தலைப்பில் ஜூலை 26,2025 அன்று நியூஸ் கார்ட் வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


#JUSTIN || "தனிக்கட்சி மெஜாரிட்டி ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர்" | #EdappadiPalaniswami | #ADMK | #PolimerNews pic.twitter.com/hlUfTU7yFo

— Polimer News (@polimernews) July 22, 2025

 

அதில் தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி அமைவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று இ.பி.எஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எடிட் செய்து தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லாததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரப்புகின்றனர். 

 

முடிவு: 


எனவே,  அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லாததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக என்று பரவுவது போலியான நியூஸ் கார்டாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.