YouTurn

போலி ‘எக்ஸ்’ பக்கத்திற்கு பதில் ட்வீட் செய்த அண்ணாமலை!

போலி ‘எக்ஸ்’ பக்கத்திற்கு பதில் ட்வீட் செய்த அண்ணாமலை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘லாரா வூல்வார்ட்’ பெயரில் இயங்கிவரும் ஒரு போலியான பக்கத்திலிருந்து (Parody Account) பதிவிடப்பட்ட ட்வீட்டிற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

பரவிய செய்தி

Throughout this journey, one cricketer stood like a champion & that’s their captain, Laura Wolvaardt. Getting two centuries on the trot in the semifinals and finals, scoring record runs in this World Cup and still seeing the game with a perspective that many lose at the time of winning and more so at the time of losing, for me, tops everything she has & will accomplish!
Many congratulations on a great World Cup.



Link / Archive Link 

விரிவான விளக்கம்

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை இந்தியாவில் உள்ள மைதானங்களில் நடைபெற்றது. அதில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 


இந்நிலையில்,  இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் லாரா வூல்வார்ட் “நான் அழவில்லை. இந்தியாவிற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாக ட்வீட் ஒன்று பரவியது.  லாரா வூல்வார்ட்டின் பெயரில் உள்ள இந்த பதிவிற்கு தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பதில் ட்வீட் செய்துள்ளார். 

உண்மை என்ன?


’லாரா வூல்வார்ட்’ பெயரில் உள்ள அந்த ‘எக்ஸ்’ பக்கத்தை பார்க்கும்போது, அதில் ’Parody Account’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ’Parody Account’ என்பது சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி, அவர்களைப் போலவே (imitates) பதிவிடுவது அல்லது விஷயங்களை நகைச்சுவையாக (satirizes) பதிவிடுவது ஆகும். இது அந்த பிரபலங்களின் அதிகாரப்பூர்வமான பக்கங்கள் அல்ல.


image.png


‘லாரா வூல்வார்ட்’-ன் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கம் - https://x.com/laurawolvaardt இதுதான்.


image.png


இருப்பினும்  “நான் அழவில்லை. இந்தியாவிற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று ’லாரா வூல்வார்ட்’ குறிப்பிட்டிருக்கிறாரா ?என்று இணையத்தில் தேடினோம். ‘துரதிர்ஷ்டவசமாக நாங்கள் தோல்வியடைந்தோம், ஆனால் நாங்கள் இதிலிருந்து நிச்சயமாக மீண்டு வருவோம்… நாங்கள் காட்டிய மன உறுதியைப் நினைத்து பெருமைப்படுகிறோம்’ என்று தான் அவர் பேசியிருப்பதாக செய்திகள் மூலமாக தெரியவருகிறது. 



இதிலிருந்து, ’நான் அழவில்லை. இந்தியாவிற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என்று லாரா வூல்வார்ட் ட்வீட் எதுவும் பதிவிடவில்லை என்பது தெரியவருகிறது. அது அவருடைய பெயரில் இயங்கிவரும் ஒரு போலியான பக்கத்தால் (Parody Account) பதிவிடப்பட்டதாகும்.


முடிவு:


‘லாரா வூல்வார்ட்’ பெயரில் இயங்கிவரும் ஒரு போலியான பக்கத்திலிருந்து (Parody Account)  பதிவிடப்பட்ட ட்வீட்டை,  ‘லாரா வூல்வார்ட்டின் அதிகாரப்பூர்வ ட்வீட் என நம்பி அண்ணாமலை பதிலளித்துள்ளார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க