YouTurn

நேற்று ஒரு மருந்து.. இன்று வேறு மருந்து.. திரித்துப் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஸ்!

நேற்று ஒரு மருந்து.. இன்று வேறு மருந்து.. திரித்துப் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஸ்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

நான் சொன்ன விஷமுறிவு மருந்தின் பெயர் FOMEPIZOLE Injection. விடியா திமுக அமைச்சர் மா. சுப்ரமணியன் சொல்வது OMEPRAZOLE Capsule. அது அல்சர் மாத்திரை. பெயரை மாற்றிச் சொல்கிறார். FOMEPIZOLE எங்கும் கிடைக்கவில்லை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை காரணம்காட்டி, இன்றைய சட்டபேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், "நான் சொன்ன விஷமுறிவு மருந்தின் பெயர் FOMEPIZOLE Injection. விடியா திமுக அமைச்சர் மா. சுப்ரமணியன் சொல்வது OMEPRAZOLE Capsule. அது அல்சர் மாத்திரை. அவர் பெயரை மாற்றிச் சொல்கிறார். FOMEPIZOLE இங்கு எங்கும் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.



அதிமுகவினர் பலரும் இதனை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை என்பது குறித்து நேற்று (ஜூன் 21) ஊடகத்திற்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “கள்ளச்சாராயம் குடித்தது, குணமடைய வேண்டுமென்றால், Omeprazole என்ற மருந்து இருந்திருந்தால், விஷச்சாராயம் அருந்தியவர்களை குணப்படுத்திருக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் இது இல்லை” என்று பேசியுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.


ஆனால் இன்று ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில், “நான் சொன்ன விஷமுறிவு மருந்தின் பெயர் FOMEPIZOLE Injection. ஆனால் திமுக அமைச்சர் மா.சுப்ரமணியம் சொல்வது OMEPRAZOLE Capsule. அது அல்சர் மாத்திரை. பெயரை மாற்றிச் சொல்கிறார்” என்று திரித்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது அதிமுக நிர்வாகி எனப் பரவும் போலி செய்தி!

மேலும் படிக்க: 2024 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடுப் பிரிவு அதிமுகவிற்கு ஆதரவா ?.. நியமிக்கப்படாத நபரின் கடிதம் !

இதற்கு முன்பும் அதிமுக குறித்து பரவிய போலி செய்திகளை ஆய்வு செய்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என அதிமுக குறித்துப் பொய் சொன்ன அண்ணாமலை!

முடிவு:

மொத்தத்தில் "Omeprazole" மருந்து குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியே பேசிவிட்டு, தற்போது தான் பேசவில்லை என்று தவறாகத் திரித்து பேசுவதை தெளிவாகக் காண முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க