YouTurn

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெண்களுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதா? உண்மை என்ன?

எப்ஸ்டீன் கோப்புகளில்  மோடி பெண்களுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தப் புகைப்படங்கள் போலியாக ‘Edit’ செய்து உருவாக்கப்பட்டவை ஆகும்.

பரவிய செய்தி

எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் அருகில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



Facebook Link


image.png


X Link

விரிவான விளக்கம்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற அமெரிக்க நிதி அதிபதி பாலியல் குற்றத்திற்காகவும், குழந்தைகள் உட்பட பல பெண்களை கடத்தி பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தியதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டவர். சமீபத்தில், எப்ஸ்டீன் சேமித்து வைத்திருந்த கோப்புகள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவை அடங்கிய கோப்புகள் எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) என்ற பெயரில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டது. எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது இந்தியாவில் பெரும் விமர்சனத்தை உண்டாக்கியிருந்தது. 


இந்நிலையில், பிரதமர் மோடி விமானப் பயணம் செய்யும் போதும் காரில் பயணம் செய்யும் போதும் பெண்கள் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் திமுக கட்சியினரால் பரப்பப்படுகிறது. 



 

உண்மை என்ன?


பரப்பப்படும் புகைப்படங்களை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடினோம். முதல் படத்தைக் கொண்டு தேடியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், மோடி ரஷ்யா நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின்-வுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை காணமுடிந்தது. இந்த புகைப்படம் 2025 டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்த போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



இரண்டாவது படத்தைக் கொண்டு தேடியபோது, மோடி மான்சி சோனி என்ற ஒரு கட்டிடக் கலை நிபுணருடன் இருக்கும் பழைய புகைப்படம் காணக் கிடைத்தது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த மான்சி சோனி என்ற கட்டிடக் கலைஞரை சட்டவிரோதமாக உளவு பார்த்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. 


image.png


மூன்றாவது புகைப்படத்தை கொண்டு தேடியபோது, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டு பயணம் ஒன்றின் போது எடுக்கப்பட்டதாக சொல்லி பிரதமர் மோடி இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருப்பதை காண்கிறோம். இந்த புகைப்படத்தில் பிரதமர் மோடி தனியாக அமர்ந்து கோப்புகளை படிப்பது போன்று காட்சிபடுத்திப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் இருக்கையில் சூட்கேஸ் மட்டுமே உள்ளதையும் காண்கிறோம்.



இதிலிருந்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின், மான்சி சோனி போன்றோருடன் இருக்கும் புகைப்படங்களை ‘Edit’ செய்து, பெண்களுடன் அமர்ந்திருப்பது போன்ற போலியான படங்கள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிகிறோம்.


முடிவு:


‘Edit’ செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு, எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெண்கள் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க