YouTurn

“தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பரப்பப்படும் புத்தகம்!

“தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பரப்பப்படும் புத்தகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“தளபதி மு க ஸ்டாலின் எழுச்சிமிகு உரைகள்” என்ற புத்தகத்தை, “தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

மு. கருணாநிதி: "ராஜிவ் காந்தி மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவரை கொன்றவர்களை மன்னித்திருப்பார்".

மு.க ஸ்டாலின்: "கலைஞர் கருணாநிதி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இறந்திருக்க மாட்டார்".

Like Father, Like Son 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் பழமொழிகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புத்தகத்தில் தொகுப்பு நீலகிரி மா.பாலமுருகன் என்றும்,  உதவி: இரா.அன்வர்கான் என்றும் குறிப்பிட்டிருந்தது. 


உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது சத்யா கருப்பையா என்ற எக்ஸ் பக்கத்தில் ஜூலை 30, 2020 அன்று தளபதி மு.க.ஸ்டாலினின் எழுச்சிமிகு உரைகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் பதிவிடபட்டிருப்பதை காணமுடிந்தது. 


அந்த புத்தகத்திலும், பரவி வரும் புத்தகத்திலும் தொகுப்பாளர் பெயர் நீலகிரி மா.பாலமுருகன் என்றே குறிப்பிட்டிருந்தது. 


இதை வைத்து தேடி பார்த்தோம். அப்போது எழுச்சிமிகு உரைகள் என்பதை, பழமொழிகள் என்று எடிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.


முடிவு : 

நம் தேடலில், “தளபதி மு க ஸ்டாலின் எழுச்சிமிகு உரைகள்” என்ற புத்தகத்தை, “தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க