YouTurn

திமுகவைச் சேர்ந்த சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை என பொய் செய்தி பரப்பும் சவுக்கு சங்கர்!

திமுகவைச் சேர்ந்த சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை என பொய் செய்தி பரப்பும் சவுக்கு சங்கர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பலரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் குறித்து பல்வேறு செய்திகளை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை என்று குறிப்பிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த சிற்றரசு உடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை சவுக்கு சங்கர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதைக் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் ஏப்ரல் 09 அன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது உண்மையே என்பதை அறிய முடிந்தது.

Times of India இது குறித்து ஏப்ரல் 09 அன்று "தமிழ்நாடு: போதைப்பொருள் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ED பல இடங்களில் சோதனை" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) செவ்வாய்க்கிழமை காலை சோதனையைத் தொடங்கியது. 

காலை 7 மணியளவில் தேடுதல் தொடங்கியது மற்றும் ED குழுக்கள் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டை அடைந்தனர். ஜாபர் சாதிக் உடனான தொடர்புக்காக சமீபத்தில் டெல்லியில் என்சிபியால் விசாரிக்கப்பட்ட திரைப்பட இயக்குனரான அமீரின் அலுவலகமும் திநகரில் சோதனை செய்யப்பட்டது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



ஆனால் இதில் திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தியது தொடர்பாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

எனவே இது குறித்து யூடர்ன் தரப்பிலிருந்து திமுக மாவட்டச் செயலாளரான சிற்றரசையும் தொடர்பு கொண்டு பேசினோம். தன்னுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறிய செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டு, பரவி வரும் செய்திகளுக்கு தன்னுடைய மறுப்பையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமையா? தவறாக திரித்துப் பரப்பும் பாஜகவினர்!

மேலும் படிக்க: கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த பெண்மணி எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ

முடிவு:

நம் தேடலில், திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க