YouTurn

பாஜக கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதா?

பாஜக கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படை பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறது.

பரவிய செய்தி

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம் என்று சொன்ன ஆட்டுக்குட்டியே இப்ப முகமூடி கிழிந்து விட்டது. 


X link | Archive link 

விரிவான விளக்கம்

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படை பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறது. 




Facebook link


இந்நிலையில், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் காரில் இருந்து 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில், “அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்ற காரில் 500 ரூபாய் நோட்டுக்களாக 2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்” என்றுள்ளது. இதனை அதிமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன ?



பரவக்கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டில் ’29.03.2024’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தேதியில் ஜூனியர் விகடன் இப்படி நியூஸ் கார்டினை வெளியிட்டதா என அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் ஜூனியர் விகடன் பதிவிடவில்லை. 



மேலும், கேசவ விநாயகம் வாகனத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வேறு ஊடகங்களில் ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா என்பதையும் தேடினோம். அப்படி எந்தவொரு செய்திகளும் வெளியாகவில்லை. 





ஜூனியர் விகடன்  தனது எக்ஸ் பக்கத்தில் ’29.03.2024’ அன்று நியூஸ் கார்ட் ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், ”அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் சென்ற காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்தல் பறக்கும் படை செய்யும் வழக்கமான சோதனையாகும்.





இதிலிருந்து பாஜக கேசவ விநாயகம் காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு  போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 



அதேசமயம் திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கும் போது பாஜக கொடி கட்டிய வாகனம் ஒன்று பிடிபட்டுள்ளது. அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் ரூ.75,000 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த மொய் கவரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்துக் கடந்த மாதம் 26ம் தேதி ’ஜெ நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.



முடிவு :



நம் தேடலில்,  பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் சென்ற காரில் ரூபாய் 2 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியதாகப் பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க