YouTurn

சீனாவில் உள்ள பாலத்தை ஜம்மு-காஷ்மீரில் இருப்பதாகப் பரப்பப்படும் பொய்!

சீனாவில் உள்ள பாலத்தை ஜம்மு-காஷ்மீரில் இருப்பதாகப் பரப்பப்படும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவில் இருக்கக்கூடிய பாலம் சீனாவில் அமைந்துள்ளது. இதனை ஜம்மு முதல் பனிஹால் வரை அமைந்த தேசிய நெடுஞ்சாலை-44 எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

Jammu & Kashmir NH 44 , Jai hind


national highway nh-44

X link

விரிவான விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணியிலிருந்து பாஜக விலகிய பிறகு, 2018 ஜூன் மாதம் அம்மாநிலச் சட்டசபை முடக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. பிறகு அம்மாநிலத்துக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலமும் ஜம்மு-காஷ்மீர் (சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம்), லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 


https://x.com/i/web/status/1839655414784238023


இந்நிலையில் ஜம்மு முதல் பனிஹால் வரை அமைக்கப்பட்ட பாலம் என வீடியோ ஒன்று பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1839655414784238023


உண்மை என்ன?


தேசிய நெடுஞ்சாலை-44 இந்தியாவில் மிக நீளமான நெடுஞ்சாலையாகும். பரவக்கூடிய வீடியோ குறித்து தேடியதில், அது ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பாலம் அல்ல என்பதை அறியமுடிந்தது. 


சீனாவைச் சேர்ந்த ’People's Daily’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இதே வீடியோ 2021ஆம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. சீனாவின் க்வைசோ (Guizhou) - யுன்னான் Yunnan என்ற மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான பாலமாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Beipanjiang


பெய்பான்ஜியாங் (Beipanjiang) கிராண்ட் பள்ளத்தாக்கிலிருந்து 565.4 மீட்டர் உயரத்தில் இந்த 'Duge Bridge' அமைந்துள்ளது. 1,341 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் பெய்பான்ஜியாங் கிராண்ட் பள்ளத்தாக்கிலிருந்து 565.4 மீட்டர் உயரத்தில் கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Hangzhou நகரையும் Yunnan மாகாணத்தில் Ruili நகரையும் இணைக்கிறது. உலகின் மிக உயரமான பாலமாக உள்ள இது 2016ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இப்பாலம் தொடர்பான செய்திகளை வேறு சில தளங்களிலும் காணமுடிகிறது.

image.png

சீனாவில் உள்ள இந்த பாலத்தைத்தான் ஜம்மு-காஷ்மீரில் இருப்பதாகத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

முடிவு: 

ஜம்மி-காஷ்மீரில் அமைந்துள்ள பாலம் எனப் பரவக் கூடிய வீடியோ குறித்த தகவல் தவறானது. இந்த பாலம் சீனாவில் அமைந்துள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.