YouTurn

கோவிலில் நுழைந்தவர்களை தாக்கிய ஆதிக்க சாதியினர் எனப் பரவும் தவறான வீடியோ!

கோவிலில் நுழைந்தவர்களை தாக்கிய ஆதிக்க சாதியினர் எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பட்டியலின சாதியை சார்ந்தவர்களை மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் தாக்கியதாகக் கூறி பரவி வரும் வீடியோ, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பொது மக்களை தாக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் தாக்கியபோது போது எடுக்கப்பட்டதாகும்.

பரவிய செய்தி

உயர்ந்தவரின் கோவிலுக்குள் நுழைந்ததற்காக அடிப்பவர் ஒரு மனிதநேயவாதி, அடியால் அவதிப்படுபவர் ஒரு கீழ்நிலை அதிகாரி, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காக்கி உடை அணிந்தவர்கள் ஜனநாயகவாதிகள். இது புதிய இந்தியா. இந்தியாவை ஆட்சி செய்வது பாஜக. 


X Link | Archive Link

விரிவான விளக்கம்

பட்டியலின சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் போலீசார் முன்னிலையிலேயே தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி ஒரு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் வீடியோவில், காவலர்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் தடியால் தாக்கப்படுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது குஜராத்தில் நடந்த சம்பவம் என்பதை அறிய முடிந்தது. 


Mint“ ஊடகத்தின் இணையப்பக்கத்தில், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த மார்ச் 15 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரால் பகுதியில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பொது மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகனங்களை தாக்கிய குற்றவாளிகளை குஜராத் போலீசார் தாக்கியபோது போது எடுக்கப்பட்ட வீடியோ இது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் அதில், ஹோலி கொண்டாட்டங்களுக்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 13 அன்று, 20 பேர் கொண்ட கும்பல் வாள்கள் மற்றும் கைத்தடியைப் பயன்படுத்தி தாக்கினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதுவரை குறைந்தது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதே போன்று, “News18 Gujarati“ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு,  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குற்றவாளிகளை காவலர்கள் தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டிருந்தனர். 



இந்நிலையில் பலரும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, கோவிலுக்குள் நுழைந்ததால் பட்டியலின சாதியை சார்ந்தவர்களை மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் போலீசார் முன்னிலையிலேயே தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், பட்டியலின சாதியை சார்ந்தவர்களை மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் தாக்கியதாகக் கூறி பரவி வரும் வீடியோ, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பொது மக்களை தாக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் தாக்கியபோது போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க