YouTurn

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடிய நாய் எனப் பரவும் பழைய வீடியோ!

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடிய நாய் எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வயநாடு நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிகளைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய்

X Link | Archive Link

விரிவான விளக்கம்

கேரளாவின் வயநாட்டில் பெய்த தொடா் கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக்கிராமங்கள் உருக்குலைந்தன. இதுவரை 1,500 க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 250 ஆக உயர்ந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிகளைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது தற்போது ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே, சமூக ஊடகங்களில் இது வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது.

‘The Weather Network’  என்ற பக்கத்தில், “நாயும் அதன் குட்டிகளும் பல நாட்களாக நிலச்சரிவில் சிக்கியிருந்த நிலையில் இறுதியாக விடுவிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர்.

எனவே இதுகுறித்து மேலும் ஆய்வுசெய்து பார்த்தோம். 'The News Minute' ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு “கேரளாவில் ஏற்பட்ட சிறிய நிலச்சரிவில் புதையுண்ட நாய் மற்றும் குட்டிகள் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன” என்ற தலைப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர். 

அதில், “பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சிறிய நிலச்சரிவில் நாயும் அதன் இரண்டு குட்டிகளும் சேற்றில் புதைந்தன. குமரநெல்லூர் காஞ்சிரத்தாணி அருகே பாலக்காடு - மலப்புரம் மாவட்ட எல்லை கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவை மீட்கப்பட்டன. நாய்களை சேற்றில் இருந்து மீட்க விலங்குகள் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன்மூலம் இது வயநாடு நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், கடந்த 2021ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிகளைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் வீடியோ, கடந்த 2021ஆம் ஆண்டில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறியமுடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.