
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்! - வெளுத்து வாங்கும் இராஜீவ் காந்தி

Twitter Link | Archive Link

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
சமீபத்தில் "இந்தியாவின் பேரிடர் மோடி, தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்" என திமுகவின் மாணவரணி தலைவரான இராஜீவ்காந்தி கூறியதாகக் கூறி ஜூனியர் விகடனின் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இதனை சவுக்கு சங்கர், U2brutus பெயரில் இயங்கும் போலி பக்கம் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
https://twitter.com/U2BrutusOffl/status/1739943843381035428
https://twitter.com/PradiTalks/status/1739952359558808031
உண்மை என்ன?
பரவி வரும் கார்டு குறித்து இராஜீவ் காந்தியின் சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த டிசம்பர் 27 அன்று "தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!!" என்று குறிப்பிட்டு ராஜீவ்காந்தி ஜூனியர் விகடனின் கார்டு ஒன்றை பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது. அதில், “இந்தியாவின் பேரிடர் மோடி... தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!' - வெளுத்து வாங்கும் இராஜீவ் காந்தி" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
https://twitter.com/rajiv_dmk/status/1739859831325114748
எனவே இதன் உண்மைத் தன்மையை அறிய, ஜூனியர் விகடன் இது குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையை ஆய்வு செய்து பார்த்தோம். அதிலும் "இந்தியாவின் பேரிடர் மோடி... தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!" என்று குறிப்பிட்டே ராஜீவ்காந்தி அளித்துள்ள பேட்டி குறித்து கட்டுரை ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் அதில், "டிசம்பர் 12-லேயே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துவிட்டது’ என்கிறாரே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்? என்ற நிரூபரின் கேள்விக்கு, "பொய் சொல்கிறார். சரி, அப்படியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டதென்றால், மத்திய ரயில்வேதுறையால் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட ரயிலை அவர்கள் ஏன் முன்பே ரத்து செய்யவில்லை. முன்பே தெரியுமென்றால், ‘தேசியப் பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பினோம்’ என வாய்கிழியப் பேசும் நிர்மலா சீதாராமன், ஏன் மழைக்கு முன்பே அனுப்பவில்லை. இந்தியாவைப் பிடித்த பேரிடர் மோடி என்றால், தமிழ்நாட்டைப் பிடித்த பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்." என்று ராஜீவ்காந்தி அதில் பதிலளித்துள்ளதையும் காண முடிந்தது.
எனவே "இந்தியாவின் பேரிடர் மோடி, தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்" என உள்ள ஜூனியன் விகடன் கார்டை சிலர் "மு.க.ஸ்டாலின்" பெயரை எடிட் செய்து தவறாக பரப்பியுள்ளனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் படிக்க: கர்னல் தியாகராஜனை திமுக ராஜீவ் காந்தி தேச துரோகி எனக் கூறியதாகப் பொய் குற்றச்சாட்டு
இதற்கு முன்பும் திமுகவின் ராஜீவ்காந்தி குறித்து பல செய்திகள் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: முன்னாள் சபாநாயகர் தனபாலை இருக்கையில் அமர வைக்காத பழனிச்சாமி எனப் பரப்பப்படும் பொய் !
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்" என திமுகவைச் சேர்ந்த இராஜீவ் காந்தி கூறியதாக பரவி வரும் ஜூனியர் விகடனின் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
https://twitter.com/U2BrutusOffl/status/1739943843381035428
https://twitter.com/PradiTalks/status/1739952359558808031
உண்மை என்ன?
பரவி வரும் கார்டு குறித்து இராஜீவ் காந்தியின் சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த டிசம்பர் 27 அன்று "தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!!" என்று குறிப்பிட்டு ராஜீவ்காந்தி ஜூனியர் விகடனின் கார்டு ஒன்றை பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது. அதில், “இந்தியாவின் பேரிடர் மோடி... தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!' - வெளுத்து வாங்கும் இராஜீவ் காந்தி" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
https://twitter.com/rajiv_dmk/status/1739859831325114748
எனவே இதன் உண்மைத் தன்மையை அறிய, ஜூனியர் விகடன் இது குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையை ஆய்வு செய்து பார்த்தோம். அதிலும் "இந்தியாவின் பேரிடர் மோடி... தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!" என்று குறிப்பிட்டே ராஜீவ்காந்தி அளித்துள்ள பேட்டி குறித்து கட்டுரை ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் அதில், "டிசம்பர் 12-லேயே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துவிட்டது’ என்கிறாரே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்? என்ற நிரூபரின் கேள்விக்கு, "பொய் சொல்கிறார். சரி, அப்படியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டதென்றால், மத்திய ரயில்வேதுறையால் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட ரயிலை அவர்கள் ஏன் முன்பே ரத்து செய்யவில்லை. முன்பே தெரியுமென்றால், ‘தேசியப் பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பினோம்’ என வாய்கிழியப் பேசும் நிர்மலா சீதாராமன், ஏன் மழைக்கு முன்பே அனுப்பவில்லை. இந்தியாவைப் பிடித்த பேரிடர் மோடி என்றால், தமிழ்நாட்டைப் பிடித்த பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்." என்று ராஜீவ்காந்தி அதில் பதிலளித்துள்ளதையும் காண முடிந்தது.
எனவே "இந்தியாவின் பேரிடர் மோடி, தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்" என உள்ள ஜூனியன் விகடன் கார்டை சிலர் "மு.க.ஸ்டாலின்" பெயரை எடிட் செய்து தவறாக பரப்பியுள்ளனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் படிக்க: கர்னல் தியாகராஜனை திமுக ராஜீவ் காந்தி தேச துரோகி எனக் கூறியதாகப் பொய் குற்றச்சாட்டு
இதற்கு முன்பும் திமுகவின் ராஜீவ்காந்தி குறித்து பல செய்திகள் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: முன்னாள் சபாநாயகர் தனபாலை இருக்கையில் அமர வைக்காத பழனிச்சாமி எனப் பரப்பப்படும் பொய் !
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்" என திமுகவைச் சேர்ந்த இராஜீவ் காந்தி கூறியதாக பரவி வரும் ஜூனியர் விகடனின் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.