YouTurn

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததா? உண்மை என்ன?

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாலியல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டததை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமே ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தது.

பரவிய செய்தி

வேற லெவல் திமுக ஆட்சி தீய சக்தி என்று மீண்டும் மீண்டும் நிரூபணம்


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

2024 டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாடு முழுவதும் விவாதமாக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகி என்று பாஜக போன்ற கட்சிகள் சொல்லிவந்தது. 


இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது விதிக்கப்பட்டிருந்த  குண்டர் சட்டத்தை திமுக அரசு ரத்து செய்யப்பட்டதாக ஒரு News Card சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் News Card-ல் இந்த செய்தி 2025 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தேடிய போது ‘தினமணி’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது.



அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட போது அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஞானசேகரனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 ஜூன் 2ஆம் தேதி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


image.png


இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுவிட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக நீதிமன்றம் தீர்பளித்தது. பாலியல் குற்ற வழக்கில், ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அவர் மீது மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது, அவரது குற்றச் செயல்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் வாதப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இவ்வாறு, பாலியல் குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமே ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தது என்பதே உண்மை. 


முடிவு:


திமுக அரசு ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க