YouTurn

தினமலரை நடுநிலை பத்திரிக்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய பொய் செய்தி !

தினமலரை நடுநிலை பத்திரிக்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய பொய் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மாணவர்களின் பசியை அறிந்து காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தினார், நடுநிலை பத்திரிகை என நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியை வெளியிட்டிருக்கின்றனர் நடுநிலை என்று சொன்னாலும், அவர்கள் தலையில் இருக்கும் கொண்டையை காட்டிவிட்டார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

கஸ்ட் 31ம் தேதி தினமலர் நாளிதழின் முகப்பு பக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடர்பாக அருவருப்பான தலைப்பில் செய்தி வெளியானதால் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

மேலும் படிக்க : காலை உணவு திட்டம் : அருவருப்பு தலைப்பால் எழுந்த கண்டனங்கள்.. தினமலருக்கு பதில் இதோ !

இதையடுத்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தினமலரை நடுநிலை பத்திரிக்கை என நினைத்துக் கொண்டிருந்தோம் எனக் கூறியதாக நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதை திமுகவைச் சேர்ந்தவர்களே பகிர்ந்து விமர்சித்து வந்தனர்.





உண்மை என்ன ? 

எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பவா செல்லத்துரை எழுதிய "சொல் வழி பயணம்" நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில்(15:30 நிமிடம்), " பல நேரங்களில் நாங்கள் நடுநிலை பத்திரிக்கை, நடுநிலை பத்திரிக்கை(நியூட்ரல்) என்று சொல்லும் பத்திரிக்கை முதல் பக்கத்தில் மிகவும் மனவேதனைக்கு உண்டான செய்தியை சொல்லி இருக்காங்க. என்னதான் நியூட்ரல் பத்திரிக்கைனு சொன்னாலும், வடிவேலு சொன்ன மாறி தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துட்டீங்க " என்றே பேசி இருக்கிறார்.



இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், " மாணவர்களின் பசியை அறிந்து காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தினார், நடுநிலை பத்திரிகை என கூறிக் கொள்ளும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியை வெளியிட்டிருக்கின்றனர் நடுநிலை என்று சொன்னாலும், அவர்கள் தலையில் இருக்கும் கொண்டையை காட்டிவிட்டார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு " என்ற நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link

மேற்காணும் நியூஸ் கார்டு நேற்று (ஆகஸ்ட் 31) இரவு 10 மணிக்கே வெளியாகி இருக்கிறது. ஆனால், அமைச்சர் அன்பில் மகேஷ், தினமலரை நடுநிலை பத்திரிக்கை என நினைத்துக் கொண்டிருந்தோம் எனக் கூறியதாக உள்ள நியூஸ் கார்டு இரவு 8 மணியளவில் இருந்தே சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் முதலில் தவறான செய்தியை வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், அமைச்சர் அன்பில் மகேஷ், தினமலரை நடுநிலை பத்திரிக்கை என நினைத்துக் கொண்டிருந்தோம் எனக் கூறியதாக பரவிய செய்தி தவறானது. அவர் நடுநிலை பத்திரிக்கை என கூறிக் கொள்ளும் பத்திரிக்கை என்றே கூறி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க