YouTurn

ரூ.21 கோடி செலவில் திருச்சியில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத்தொட்டி இடிந்ததா?

ரூ.21 கோடி செலவில் திருச்சியில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத்தொட்டி இடிந்ததா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜனவரி 19 அன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திருச்சி: ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது.



Facebook Link | Archive Link 

விரிவான விளக்கம்

திருச்சியில் புதிதாக ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி ஒன்று இடிந்து விழுந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அப்பத்திவுகளில் “முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போதே இடிந்து விழுந்தது“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “தினகரன்“ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் அதே புகைப்படத்தில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. 


ஜனவரி 21, 2025 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியின் விளக்கத்தில் “ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் குஜராத் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.



இது குறித்து மேலும் தேடியதில், NDTV ஊடகப் பக்கத்தில் “சூரத்தில் புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத்தொட்டி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, குஜராத் காவல்துறை ஒரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. ஜனவரி 19 அன்று, வழக்கமான கொள்ளளவு சோதனைக்காக சூரத்தில் அமைந்துள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட 15 மீட்டர் உயர நீர் தொட்டியை பொறியாளர்கள் தண்ணீரால் நிரப்பியபோது, சில நிமிடங்களில், 9 லட்சம் லிட்டர் தண்ணீரும் கொட்டி பாலம் சிதைந்தது“ என்றும் அதில் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


இதன் மூலம் ஜனவரி 19 அன்று "குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது" என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள தினகரன் செய்தியை, எடிட் செய்து "திருச்சி" என்று மாற்றி தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.


முடிவு: 


நம் தேடலில், திருச்சி: ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்ததாகப் பரவும் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததல்ல. குஜராத் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க