YouTurn

திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதா?

திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது உண்மையே. ஆனால் நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வ.களத்தூரிலும் 1951 ஆம் ஆண்டில் இருந்தே அங்குள்ள இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே பிரச்சினை நீடித்து வருகிறது.

பரவிய செய்தி


கோயம்புத்தூர் மதக்கலவரம் திமுக ஆட்சியில். நாகூர் கலவரம் மற்றும் வி.களத்தூர் கலவரங்களும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. 


YouTube Link: 

விரிவான விளக்கம்

சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளிலும், பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அதிமுகவைச் சேர்ந்த ஜவகர் அலி, “கோயம்புத்தூர் மதக்கலவரம் திமுக ஆட்சியில்; நாகூர் கலவரம் மற்றும் வி.களத்தூர் கலவரங்களும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.  



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது குறித்து நாம் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி, 1997 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் கலவரம் ஏற்பட்டது திமுக ஆட்சியில் தான் என்பது உண்மையே என்பதை உறுதி படுத்த முடிந்தது. 



இதைத் தொடர்ந்து நாகூர் கலவரம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில் என்பதை அறிய முடிந்தது. இது குறித்த அறிக்கையை பேரா அ.மார்க்ஸ் (தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), வழக்குரைஞர் தய்.கந்தசாமி, (தலித் பண்பாட்டுப் பேரவை) உள்ளிட்ட பலர் அடங்கிய குழு வெளியிட்டிருந்தனர். இது குறித்த அறிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டுள்ளது.



இதே போன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வ.களத்தூரிலும் 1951 ஆம் ஆண்டில் இருந்தே அங்குள்ள இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே பிரச்சினை நீடித்து வருகிறது என்பதை செய்திகளின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டில் வ.களத்தூர் கலவரம் குறித்து மற்றொரு இணையதளப் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 



இதன மூலம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே அங்கு கலவரங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இந்நிலையில் திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதாகக் கூறி தவறான தகவலை திரித்துப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க