YouTurn

கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா?

கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் புயல், கனமழை எச்சரிக்கையை‌ தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை அவர் அங்குள்ள கம்யூட்டர்களில் ஆய்வு செய்வதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.

பரவிய செய்தி

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன் Computer on பண்ணாமலும் ஆய்வு செய்யலாம்



Instagram Link: 

விரிவான விளக்கம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழ்நாட்டில் கடலோர பகுதிகள் வழியாக நகர்ந்து வருகிறது. சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவம்பர் 30) ஆய்வு செய்தார்.


இந்நிலையில் கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதாகக் கூறி புகைப்படம் ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 



X Link | Archive Link


உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 30 அன்று பதிவு செய்திருந்த வீடியோவைக் காண முடிந்தது. அதில் “பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிட்வா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்போடு இருப்போம்“ என்றும் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், அங்குள்ள கம்யூட்டர்களில் அவர் ஆய்வு செய்வதைக் காண முடிகிறது. மேலும் அந்த வீடியோவில் 02:32 முதல் 02:36 வரையிலான நேரத்தில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளன. அதில் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் கம்யூட்டர் இயக்கத்தில் இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.


#CycloneDitvah pic.twitter.com/ndswIo210F

— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) November 29, 2025


மேலும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் புயல், கனமழை எச்சரிக்கையை‌த் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை அவர் ஆய்வு செய்வது குறித்து மற்றொரு பதிவும் அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.  



இந்நிலையில் கம்யூட்டரின் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க