YouTurn

கொளத்தூரில் மக்கள் வரிப்பணத்தில் முதலமைச்சர் இருசக்கர வாகனங்களை வழங்கினாரா? உண்மை என்ன?

கொளத்தூரில் மக்கள் வரிப்பணத்தில் முதலமைச்சர் இருசக்கர வாகனங்களை வழங்கினாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கொளத்தூர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அங்கே நடந்த தீ விபத்திற்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கட்சி சார்பாக வழங்கப்பட்டதாகும்.

பரவிய செய்தி

தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அரசு ஏன் புது வாகனம் வாங்கி தரணும் தனியார் உடற்பயிற்சி கூடம் இன்சூரன்ஸ் பண்ணியிருக்குமே... மக்கள் வரிப்பணத்தை எப்படி எல்லாம் கரியாக்குகிறீர்கள்... இதுக்கு பொம்மை மாடலா 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சென்னை கொளத்தூரில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீயிக்கு இரையாகின. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருசக்கர வாகனங்களில் வழங்கினார். இந்நிலையில்  மக்கள் வரிப்பணத்தை கொண்டு தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக புதிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுவதாக எக்ஸ் பக்கத்தில் பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் இது குறித்து ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மாறாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தனியார் ஜிம் தீ விபத்து ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களை சந்தித்து, புதிய இருசக்கர  வாகனங்களை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அந்த புகைப்படங்களில் திமுகவின் கட்சி கொடிகள் இடம்பெற்றிருப்பதை காணமுடிந்தது. அரசு நடத்தும் விழாக்களில் எந்த கட்சி கொடியும் இடம்பெற்றிருக்கக் கூடாது. எனவே இது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடிந்தது. கொளத்தூர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அங்கே நடந்த தீ விபத்திற்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கட்சி சார்பாக வழங்கப்பட்டதாகும். 


இது குறித்து பதிவை அமைச்சர் கே.என்.நேருவின் எக்ஸ் பக்கத்திலும் பார்க்கமுடிந்தது. அதில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்களிலும், திமுக கொடிகள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. 

முடிவு: 

எனவே, கொளத்தூர் பகுதியில் தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக திமுக கட்சி சார்பாக மூன்று நபர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படவில்லை. இதனை திரித்து தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க