யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு ஒரு சிசிடிவி-யில் பதிவாகியுள்ளதாகப் பரவும் வீடியோ சீனாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
நினைத்து பார்க்கவே முடியாத ஆபத்தில் வயநாடு.
— உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) July 30, 2024
நமக்கும் இது ஒரு பாடம்.. நீலகிரி, வால்பாறை, கொடைக்கானலில் கட்டுப்பாடற்ற காடழிப்புக்கும், கட்டுமானங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானலை மாநகராட்சியாக மாற்றும் முடிவையும் திமுக அரசு கைவிட வேண்டும். pic.twitter.com/YuGnCubwet
இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், அது வயநாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை அறிய முடிந்தது.
இந்த வீடியோவில் இடதுபக்கம் மேல் ஓரத்தில் ‘16.06.2024’ என்ற தேதி உள்ளது. ஆனால், வயநாட்டில் நிலச்சரிவு ஜூலை, 30ஆம் தேதிதான் ஏற்பட்டது. இதே வீடியோ கடந்த ஜூன் 30ஆம் தேதி Bacot (@bacotwarga) என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் சீனாவின் Meizu என்ற பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Amazing video of the mid-June flooding in Meizu, Guangdong, China. pic.twitter.com/XxACRpBFki
— Bacot (@bacotwarga) June 30, 2024
மேற்கொண்டு இதுதொடர்பாகத் தேடியதில், இதே வீடியோ ‘Dailymotion’ என்ற தளத்திலும் கடந்த ஜூன் 28ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் இச்சம்பவம் சீனாவில் நடந்ததாகத்தான் உள்ளது. ‘VK’ என்ற தளத்திலும் இதே தகவலைக் காணமுடிகிறது.

இவற்றிலிருந்து இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. ஆனால், இதனை வயநாடு எனத் சமூக வலைத்தளத்தில் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
வயநாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என சமூக வலைத்தளத்தில் பரவும் சிசிடிவி காட்சி சீனாவில் கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்டது.
