YouTurn

வெள்ள நிவாரணத்தில் உதவித்தொகை கேட்ட சீமான் எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

வெள்ள நிவாரணத்தில் உதவித்தொகை கேட்ட சீமான் எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நிவாரணத்தொகை - சீமான் வேண்டுகோள்; தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என சீமான் வேண்டுகோள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கும் பணி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும்" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாகக் கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து சீமான் ஏதாவது அறிக்கை அளித்துள்ளாரா என்பது குறித்து அவரது சமூக ஊடக பக்கங்களில் தேடியதில், வெள்ள நிவாரணத் தொகையை நாம் தமிழர் கட்சிக்கு வழங்குவது குறித்து அவர் எதுவும் கூறவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில், பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தேடியதில், இன்று (டிசம்பர் 18), முற்பகல் 11:10 மணியளவில் "நிவாரணத்தொகை - சீமான் வேண்டுகோள்" என்ற தலைப்பில் அவர்கள் எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.



மேலும் புதிய தலைமுறையில் தற்போது புதிய வடிவமைப்பில் நியூஸ் கார்டு வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பரவி வரும் நியூஸ் கார்டு பழைய வடிவமைப்பில் உள்ள நியூஸ் கார்டை போன்று இன்றைய தேதி (டிசம்பர் 18) குறிப்பிடப்பட்டு எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது.

மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் பணியாளரை தாக்கியது ஆந்திர பாஜகவினரே எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

முடிவு:

நம் தேடலில், "நிவாரணத்தொகை - சீமான் வேண்டுகோள்" என்ற தலைப்பில் பரவி வரும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க