யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது 30/06/2023 அன்று வெளியிடப்பட்ட பழைய News Card ஆகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் சட்டமன்றத்தில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதை கண்டித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வருக்கு போட்டியாக ஊட்டியில் துணைவேந்தர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கூட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இவ்வாறாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்குகள் தீவிரமடைந்துள்ள இந்த சூழலில், 'செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிடும் ’புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் News Card ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
#செந்தில்பாலாஜியை நீக்க எனக்கு அதிகாரம் இருக்கிறது' - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்
அரசியல் சாசன பிரிவு 154, 163, 164ஐ பயன்படுத்தி செந்தில்பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் கடிதம் pic.twitter.com/ZjZxJKk7Dq
உண்மை என்ன?
பரப்பப்படும் News Card-ல் இது 30/06/2023 அன்று வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பொருத்தமான keywords கொண்டு தேடியதில், ‘புதிய தலைமுறை’ செய்தித்தளத்திலும் இந்த News Card-ஐ காணமுடிந்தது. மேலும், அதே ’புதிய தலைமுறை’ செய்தித்தளத்தில் இது குறித்த ஒரு செய்திக் கட்டுரையைக் காணமுடிந்தது.

அதன்படி, செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது, அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியதாக வெளியான செய்தி உண்மைதான் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அதே நேரத்தில், இவ்வாறு பதவி நீக்கம் செய்து அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ’அட்டர்னி ஜெனரலிடம் இது குறித்து கருத்துக் கேட்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், அதனால் மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ததை நிறுத்தி வைப்பதாகவும்’ தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.என்.ரவி கடிதம் எழுதியது பற்றியும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையெல்லாம் மறைத்துவிட்டு, 2023ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை தற்போது நடந்ததாக பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர்.
முடிவு:
பரப்பப்படும் News Card 30/06/2023 அன்று வெளியிடப்பட்ட பழைய News Card ஆகும். மேலும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதனை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவி கூறியது குறிப்பிடத்தக்கது.
