YouTurn

பீகாரில் இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பழைய வீடியோ!

பீகாரில் இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மதரஸா ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி 2015-ல் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

பரவிய செய்தி

பிகார் மாநிலத்தில் போலீசார் உடன் மோதிய இஸ்லாமிய போராட்டக்காரர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்பட்டது.


image.png

X link

விரிவான விளக்கம்

பீகார் மாநிலத்தில் இஸ்லாமியப் போராட்டக்காரர்கள் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் அதனால் அவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


https://x.com/i/web/status/1854760307190907149


உண்மை என்ன?


பரவக் கூடிய வீடியோ பற்றி 2015, ஆகஸ்ட் மாதம்India.com’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. வீடியோவில் காவல் துறையினர் முஸ்லீம் ஒருவரை அடிக்கும் காட்சி இந்த கட்டுரையிலும் புகைப்படமாக இடம்பெற்றுள்ளது. இது குறித்து Times Of India, ANI ஆகிய ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

ClaimIndia.com

பீகார் மாநில அரசு மதரஸா ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி மதரஸா ஆசிரியர் சங்கம் சார்பில் 2015, ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. கர்தானிபாக் (Gardanibagh) ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் முதலமைச்சரின் வீட்டிற்கு செல்ல முயன்றதாகக் கூறி அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். 


அந்த தடியடியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நிகழ்ந்த சம்பவம் போல் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

https://x.com/i/web/status/636877095809888257

இந்த பொய் செய்தியைப் பரப்பிய ஜானி பாய் (@Johni_raja) என்ற எக்ஸ் பக்கம் இதற்கு முன்னர் பல பொய் செய்திகளைப் பரப்பியுள்ளது. அவை குறித்தும் யூடர்ன் தளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம் (1, 2, 3). 


மேலும் படிக்க: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மது வழங்கப்படுவதாகப் பரப்பப்படும் பொய்!

முடிவு: 


பீகார் மாநில அரசு மதரஸா ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி மதரஸா ஆசிரியர் சங்கம் 2015ம் ஆண்டு போராட்டம் நடத்தியது. அப்போது காவல் துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது. இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நிகழ்ந்தது போல் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க