
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X link
விரிவான விளக்கம்
அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்படுத்த ஒன்றிய அமைச்சரவை 2020 பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

X link | Archive link
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக திமுக மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றினை பரப்பி வருகின்றனர்.
ஜெய் சீரகம் ராமர் கோயில் திறப்பதற்கு முன்பே உ.பி. இரயில் நிலையம் எரியுதாம். அவ்வளவு ராசிகார பைய ராமன்.எனக்கு என்னமே இது சங்கிகள் வேலையா தான் இருக்கும்னு தோனுது. இத வச்சி கலவரம் பன்ன#Goback_PanautiModi pic.twitter.com/Y9xMwqNFUD
— ASHOK. G தமிழ்❤ (@ASHOK25539881) January 1, 2024
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், அது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம் ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்து என்பதை அறிய முடிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ‘News Drum’ என்னும் தளத்தில் 2023, ஏப்ரல் 7ம் தேதி வெளியான செய்தியில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தோஷ்பூர் என்னும் இரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 20க்கும் மேற்பட்ட கடைகள் சேதமாகின. மேலும் அப்பகுதியில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 6ம் தேதி மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ செய்தியாக வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் இடம்பெற்றுள்ளது.

அவ்விடத்தில் எடுக்கப்பட்ட வேறொரு வீடியோவை ‘Piyali Mitra’ என்ற பத்திரிகையாளரும் X (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Watch| Massive fire breaks out near Santoshpur Railway Station. Several fire tenders working to douse the fire. Train service on Balligunge and Budge-Budge line disrupt. pic.twitter.com/6CVxtkrwJ8
— Piyali Mitra (@Plchakraborty) April 6, 2023
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை உத்தரப் பிரதேசம் எனத் தவறாக பரப்புகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்தை உத்தரப் பிரதேசம் என்றும், ராமர் கோயில் திறப்புடனும் ஒப்பிட்டு தவறாக பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.