YouTurn

அயோத்தியில் காலி தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தால் ரூ.5 வழங்குவதாகப் பரவும் தவறான தகவல்!

அயோத்தியில் காலி தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தால் ரூ.5 வழங்குவதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

உத்தர பிரதேசத்தின் அயோத்யாவில் உபயோகபடுத்திய வாட்டர் பாட்டிலை திரும்ப அளித்தால் 5₹ அளிக்கப்படும். தூய்மை இந்தியா!

Facebook link

விரிவான விளக்கம்

நாள்தோறும் டன் கணக்கில் சேருகின்ற பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக எப்படிச் சேகரிப்பது, எப்படி மறுசுழற்சி செய்வது என பல்வேறு யோசனைகளும்  திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 



Instagram link

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உபயோகப்படுத்தப்பட்ட வாட்டர் பாட்டிலை தூக்கி எறியாமல் திருப்பி அளித்தால் ரூ.5 அளிப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜக-வினரல் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் ஒன்றிய அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் பெயரையும் குறிப்பிட்டு பரப்புகின்றனர்.



உண்மை என்ன?

பரவக் கூடிய புகைப்படத்தில் உள்ள வாட்டர் பாட்டிலில் இருக்கக் கூடிய இந்தி வார்த்தைகளைக் கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்துப் படித்தோம். அதில், ரூ.5 என இருப்பதற்குக் கீழே 'பணத்தைத் திரும்பப் பெறுங்கள்' என்றுள்ளது. 

அதேபோல் QR code-க்கு கீழே 'ரீஃபண்ட் சென்டருக்கு காலியான பாட்டில்கள் / பாக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்து ₹5 திரும்பப் பெறுங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இது மட்டுமின்றி அந்த ஸ்டிக்கரின் வலது கீழ் பக்கம் 'the kabadiwala' என ஆங்கிலத்தில் உள்ளது. 

[caption id="attachment_52305" align="aligncenter" width="436"] கூகுள் ட்ரான்ஸ்லேட்[/caption]

இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில் இதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 'Bisleri' பாட்டில் ‘The Kabadiwala’ என்னும் எக்ஸ் பக்கத்தில் கடந்த 10ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘அயோத்தியில், பணத்தைத் திரும்பப்பெறும் மையத்தில் காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தால், ₹5 டெபாசிட் திரும்பப் பெறுவீர்கள். அயோத்தியைத் தூய்மையாக வைத்திருக்க The Kabadiwala அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சி இது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பதிவுகள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் காண முடிகிறது. 



ஒருவர் வாங்கக் கூடிய தண்ணீர் பாட்டில், சிப்ஸ் பாக்கெட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ரூ.5 செலுத்தி வாங்க வேண்டும். பெறப்பட்ட இந்த கூடுதல் (டெபாசிட்) தொகைக்காக ஒரு QR code அந்த பாட்டில் அல்லது பாக்கெட்டின் மேல் ஒட்டப்படும். பிறகு காலி பாட்டிலை The Kabadiwala அமைத்துள்ள மையத்தில் திருப்பி கொடுத்து டெபாசிட் பணத்தைத் திரும்பப் பெறலாம். 



Kabadiwala என்னும் அமைப்பு குப்பைகளைச் சேகரிப்பது, மறுசுழற்சி செய்வது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. தற்போது அப்பணிகளின் ஒரு கட்டமாக அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து டெபாசிட் முறையில் பயன்படுத்தப்பட்ட வாட்டர் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. 

இதில் வாடிக்கையாளர் செலுத்திய டெபாசிட் பணம் தான் திருப்பி செலுத்தப்படுகிறது. அயோத்தி அரசோ, Kabadiwala அமைப்போ எந்த பணத்தையும் வழங்கவில்லை. ஆனால், பாட்டிலைத் திருப்பி கொடுத்தாலே 5 ரூபாய் தருவதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. 

மேலும் படிக்க : அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த 12 தங்க வாகனங்கள் எனப் பரவும் தெலங்கானா கோவில் வீடியோ !

மேலும் படிக்க : அயோத்தி ராமர் கோவிலின் ஒரு நாள் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் ராஜஸ்தான் கோவில் வீடியோ!

முடிவு : 

நம் தேடலில், அயோத்தியில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலைத் திருப்பி கொடுத்தால் 5 ரூபாய் தருவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. தண்ணீர் பாட்டிலை வாங்கக் கூடியவர் செலுத்திய டெபாசிட் பணம்தான் திருப்பி கொடுக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க